'ஸ்கெட்ச்' நிஷாவுக்கு இல்ல... ஆஹா இதுவல்லவோ 'ராஜதந்திரம்' பாராட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று கோர்ட் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டின் பாசமலர்கள் நிஷா-ரியோ கூண்டுக்கு வந்தனர். என்னடா இது என ரசிகர்கள் ஷாக்காக இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வைத்து இறுதிவரை வாதாடினார். ரெண்டு பேரும் நல்லாத்தானே இருந்தாங்க என்ன ஆச்சு என ரசிகர்கள் ரூம் போட்டு யோசிக்க கடைசியில் வாதம் முடிந்தது.

நிஷா மீது எந்த தவறும் இல்லை என்பதுபோல நீதிபதி சுசித்ரா தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து கோர்ட் ஒத்தி வைக்கப்பட அப்போது தான் ரியோவின் ராஜதந்திரம் புரிந்தது. அதாவது சுச்சி வீட்டுக்குள் வந்தபோது நிஷா மீது அவர் சொன்ன குற்றச்சாட்டுகளை வைத்து கேஸ் எழுதிய ரியோ, சுச்சியின் வாயாலேயே அதை தவறு என சொல்ல வைத்து விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஆஹா நீங்க உண்மையிலேயே வேற லெவல் பாஸ் என ரியோவை பாராட்டி வருகின்றனர். இந்த டாஸ்க் முடிந்ததும் நிஷா, ரியோ, ரமேஷ், சோம், கேப்ரியலா ஆகிய ஐவரும் இதுகுறித்த விவாதம் செய்து மகிழ்ந்ததை பார்த்த ரசிகர்கள், இப்படியே இருங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Fans applauded Rio Raj's Clever move in Court Task

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.