'ரஷ்மிகாவ பாத்தே ஆகணும்!'.. ஊரடங்கிலும் 900 கி.மீ பயணித்த ரசிகர்!.. ‘யாருய்யா அவரு!’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா முழுவதும் கொரோனாவை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்தக் கடுமையான சூழலிலும் தம்முடைய விருப்பமான நடிகை ரஷ்மிகாவை பார்த்தே ஆக வேண்டும் என்று ரசிகர் ஒருவர் 900 கிலோ மீட்டர் பயணம் செய்த சம்பவம் ஆச்சரியப் படுத்தி இருக்கிறது.

கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்து பிரபலமானார் ரஷ்மிகா. தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா, யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான டாப் டக்கர் எனும் ஆல்பம் பாடலில் நடித்து இந்தியா முழுவதும் குறிப்பாக பாலிவுட்டிலும் பிரபலமானார்.

முன்னதாக நடிகர் விஜய் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அவருக்கு தேதிகள் இல்லாத சூழ்நிலை காரணமாக அவரால் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும், இதன் பிறகுதான் மாளவிகா மோகனன் அந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனிடையே ரஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்கள் பெருகிக் கொண்டே போகின்றனர் என்று சொல்லலாம். இந்த சூழலில் ஊரடங்கு சமயத்திலும் ரஷ்மிகா மந்தனாவை சந்தித்தே தீருவேன் என்று ரசிகர் ஒருவர் 900 கிலோ மீட்டர் பயணம் செய்து அவரை சந்திக்கச் சென்றுள்ளார். தெலுங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர் ரஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகர். இவர்தான் இந்த ஆச்சரிய செயலை செய்துள்ளார்.

ஆகாஷ் திரிபாதியின் வீடு தெலுங்கானாவில் உள்ளது. அங்கிருந்து கர்நாடகாவில் இருக்கும் ரஷ்மிகா மந்தனாவின் வீட்டுக்கு கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் எத்தனை தூரங்கள் கடந்தாலும் ஒரு ரசிகனாக தனக்கு விருப்பமான நடிகை ரஷ்மிகா மந்தனாவை சந்தித்தே தீர வேண்டும் என்கிற நோக்கில் வழி நெடுக முகவரியை விசாரித்துக் கொண்டே ஆகாஷ் திரிபாதி செல்ல, நடுவில் சந்தேகப்பட்ட சிலர் போலீசாரிடம் ஆகாஷ் திரிபாதி பற்றி தெரிவித்துள்ளனர்.‌

இதனையடுத்து உடனடியாக ஆகாஷ் திரிபாதியை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், இது பற்றி விசாரிக்கும்போது அவர் விபரங்களைக் கூற, ஆனால் கர்நாடகாவில் ரஷ்மிகா மந்தனா இருக்கும் பகுதியில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆகாஷ் திரிபாதி அங்கு செல்லமுடியாது என்று போலீசார் அவருக்கு விளக்கி இருக்கின்றனர்.‌

அத்துடன் ரஷ்மிகா மந்தனா படப்பிடிப்புக்காக மும்பை சென்று விட்டதாகவும் போலீசார் அவரிடம் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனால் சற்றே ஏமாற்றமடைந்த ரஷ்மிகாவின் ரசிகர் ஆகாஷ் திரிபாதி, சோகத்துடன் ஊர் திரும்பியிருக்கிறார். இதுபற்றி கேள்விப்பட்ட பலரும் ரஷ்மிகாவுக்கு இப்படிப்பட்ட ஒரு ரசிகரா? என்று வியந்து போயுள்ளனர்.

'ரஷ்மிகாவ பாத்தே ஆகணும்!'.. ஊரடங்கிலும் 900 கி.மீ பயணித்த ரசிகர்!.. ‘யாருய்யா அவரு!’ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Fan of Rashmika Mandanna travels 900 KM to see her viral story

People looking for online information on Rashmika Mandanna will find this news story useful.