ரஜினி படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம்!! மனம் திறந்த பிரபல நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சரண் இயக்கத்தில் ஜெமினி படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். 

ஏ வி எம் தயாரிப்பில்  ஜெமினி படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து  அஜித் நடித்த ‘வில்லன்’, கமல்ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’, பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார்.

பின்னர் அவர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்ததால் பட வாய்ப்பை இழந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். ‘சகுனி’, ‘ஆம்பள, ‘சர்வர் சுந்தரம்’' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வரும் கிரண் தற்போது இன்ஸ்டகிராமில் ஒரு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.அதில் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை  ஜெமினி படத்தில் நடித்ததால் தவறவிட்டு விட்டதாகவும், 

மேலும் நடிப்பிலும் நடனத்திலும் ரஜினியை யாராலும் தொடமுடியாது என்றும்,கடந்த ஆறு மணி நேரமாக ‘பாபா’ படத்தின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாக கிரண் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Famous Tamil Actress regrets not being able to act with Rajini

People looking for online information on Ajith Kumar, Kamal Haasan, Rajinikanth, Vikram, Villain will find this news story useful.