கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சீரியல் நடிகை!!! யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற சீரியல்களில்  நடிப்பிற்காக ரசிகர்களிடம் ஆதரவை பெற்றவர் பிரபல தொலைக்காட்சி நடிகை நீலிமா ராணி.

தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரை பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் விஜய் டிவியின் அரண்மனை கிளியில் கடைசியாக காணப்பட்டார். பின்னர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். சின்னத்திரை தவிர, குற்றம்ம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி மற்றும் இன்னும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். 

நடிகை நீலிமா தன்னை விட 12 வயது மூத்த இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அழகான மகள் பிறந்தார்.

நீலிமா, தனது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் நீலிமா தனது கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ரசிகர்களுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் ஜனவரி 2022 இல் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “இனிய ஆண்டுவிழா! பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம், ஜனவரியில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி! ” என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!

 

Tags : Neelima

FAMOUS SERIAL ACTRESS ANNOUNCES HER SECOND PREGNANCY

People looking for online information on Neelima will find this news story useful.