பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த திடீர் மாற்றம்! இவருக்கு பதில் இவரா? செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்றாகும். மேலும் இந்த சீரியல் கதாபாத்திரங்கள் ரசிகர்களுடன் நன்கு பரிட்சயமாகியுள்ளன, மேலும் இந்த சீரியல் அதிக எண்ணிக்கையிலான கூட்டு குடும்ப பிரியர்களை ஈர்த்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு சகோதரர்களின் கதை. சமீபத்தில், நடிகர் சரவண விக்ரமின் (சீரியலில் கண்ணன்) திரை மனைவி வி.ஜே. தீபிகா (ஐஸ்வர்யா கதாபாத்திரம்) சீரியலில் இருந்து விலகலாம் என்றும் மற்றொரு பிரபல நடிகை சாய் காயத்ரி அவருக்குப் பதிலாக வரலாம் என்றும் தகவல்கள் பரவின!

சாய் காயத்ரியுடன் பிஹைன்ட்வுட்ஸ் தொடர்பு கொண்டபோது, ​​அது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பதிலளித்தார். மேலும் இன்று, நடிகை சாய் காயத்ரி, விஜே தீபிகாவை மாற்றுவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் தனது புகைப்படங்களைப் பகிர்ந்து, இச்செய்தியை நடிகை சாய் காயத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதில் கீழ்கண்ட்வாறு கூறியுள்ளார்."எனவே மக்களே ஆம், இன்று முதல் நீங்கள் என்னை பாண்டியன் ஸ்டோரில் ஐஸ்வர்யாவாகப் பார்க்கலாம். எனவே எனக்கு தேவையானது உங்கள் அன்பும்  ஆதரவும். இந்த ரோலுக்கு நான் நியாயம் சேர்த்து உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என்று நம்புகிறேன்.என்னை ஆசீர்வதியுங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

FAMOUS ACTRESS REPLACES THIS PANDIAN STORES FAME

People looking for online information on Pandian stores will find this news story useful.