உறுதியாக இருந்த எழில் திடீர் பிரேக் அப்.! உடைந்து அழுத அமிர்தா.. பரபரப்பு ப்ரோமோ BAAKIYALAKSHMI

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார். கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார்.

Advertising
>
Advertising

                                      Image Credit : Vijay Television

Also Read | "விஜயகாந்த் மாதிரி இருக்கேனா? நான் தோத்ததுக்கு காரணமே அதுதான்.!" - ‘சித்தப்பு’ சரவணன் Breaks

இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இனியா சென்றதால் கோபியின் அப்பாவும் இனியாவின் தாத்தாவுமான பாக்கியலட்சுமியின் மாமனார் அதே வீட்டில் சென்று வசிக்க தொடங்கி விட்டார்.

இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி செய்து வந்த சமையல் காண்ட்ராக்ட் பணி தற்போது சிக்கலை சந்தித்து மீண்டு எழுந்து வருகிறது. ராதிகாவுடனான தேர்தல் போட்டியில் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார். ராதிகா இப்போதுதான் மெல்ல மெல்ல கோபியின் இன்னொரு முகத்தை அறிந்து கொண்டு வருகிறார். இதேபோல் அதிக வருமானத்தை வைத்தும் குடும்ப செலவுகளை மேனேஜ் பண்ண முடியாமல் ராதிகா திணற, ஆனால் கோபி முன்பு கொடுத்த குறைந்த பணத்தை கொண்டு பாக்கியலட்சுமி குடும்பத்தை நன்றாக நிர்வகித்ததுடன் வகை வகையாக சமைத்து போட்டார்.

Image Credit : Vijay Television

இதனிடையே கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற பாடுபடுகிறார் பாக்கியலட்சுமி. அதன் ஒரு பகுதியாக மீண்டும் சமைத்து டேக் அவே உணவு பொருள் கடையை வீட்டிலேயே பல எதிர்ப்புகளை மீறி நடத்துகிறார். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனாக வரும் எழில் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கோபியிடம் இருந்து வீட்டை பணம் கொடுத்து வாங்கி பாக்கியாவிடம் கொடுக்க முற்படுகிறார். அதற்கு தான் எடுக்க போகும் சினிமாவை நம்பி இருந்தார். 

Image Credit : Vijay Television

ஆனால் எழிலின் தயாரிப்பாளரின் மகள் எழில் மீது ஆசைப்பட, எழிலோ, தான் காதலிக்கும் அமிர்தாவையே திருமணம் செய்யவுள்ளதாக கூறுகிறார். இதனால் அவரது பட  தயாரிப்பாளர் கோபப்பட, படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Image Credit : Vijay Television

இதனை அடுத்து எழிலின் பாட்டியும் அண்ணனும் அமிர்தாவை விட்டுவிட்டு, தயாரிப்பாளரின் மகள் வர்ஷினியை கல்யாணம் பண்ணச் சொல்லி வற்புறுத்தியதுடன், அந்த தயாரிப்பாளரிடம் எழிலை வர்ஷினிக்கே கல்யாணம் பண்ணி தருவதாக சொல்லி வாக்கு கொடுத்துவிட்டு வீட்டை கோபியிடம் இருந்து வாங்குவதற்கான பணத்தையும் வாங்கிக்கொண்டுவந்துவிட்டனர்.

Image Credit : Vijay Television

இந்த அழுத்தம் தாங்காமல், வீட்டில் இருக்கும் அனைவருக்காகவும், எழில் அமிர்தாவிடம் சென்று காதலை பிரேக் அப் பண்ணிவிட்டார். இதனால் அமிர்தா உருக்கமாக உடைந்து அழுகிறார். ஏற்கனவே கணவரை இழந்த சிங்கிள் மதரான அமிர்தா எழிலை கரம் பிடிப்பாரா? என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தான் தெரியும்.

Also Read | "சுபம்னு போட்டாய்ங்களா..?" .. பாரதி கண்ணம்மா விறுவிறு இறுதி எபிசோடுகளில் நடந்தது என்ன? Bharathi Kannamma

தொடர்புடைய இணைப்புகள்

Ezhil Break up with Amirtha Baakiyalakshmi new promo

People looking for online information on Baakiyalakshmi Promo, Baakiyalakshmi today episode, Baakiyalaskhmi today Promo will find this news story useful.