VIDEO: "ஏனுங் அம்மணி.. தண்ணி இருக்குதுங்களா...".. சத்யராஜ் தங்கை வீட்டுக்கு வந்த யானை குட்டீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோவை மாவட்டத்தில் இருக்கிற பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ளது நடிகர் சத்யராஜின் தங்கை வீடு.

இங்குதான் ஒரு பதினைந்து காட்டு யானைகள் தண்ணீர் தேடி வந்து அலைந்திருக்கின்றன. அப்போது வீட்டின் முன்பக்கம் இருந்த தொட்டிகளில் யானைகள் உரிமையுடன் தண்ணீர் குடித்ததை, அந்த வீட்டு உரிமையாளர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த யானைக் குட்டிகளை பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர். 

எப்போதும் காட்டுக்குள் இருந்து யானைகள் இப்படி வழித்தடங்களில் இருக்கும் தண்ணீரை தேடி மலைப்பகுதி, காட்டுப் பகுதிகளில் இருக்கும் வீடுகளில் தஞ்சம் அடைந்து தண்ணீர் குடிப்பதும் உணவு தேடுவதும் வழக்கம். அப்படித்தான் சத்யராஜின் தங்கை வீட்டில் தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடிப்பதற்கு இந்த யானைகள் வந்துள்ளன.

தண்ணீர் குடித்தது மட்டுமல்லாமல், மேலும் அங்கு சில மணித்துளிகள் நின்று கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்துள்ளன. யானைகள் இப்படி ஒய்யாரமாக இருந்ததை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் மொட்டை மாடியில் நின்று யானைக்குட்டி வீடியோ எடுத்தும் புகைப்படம் எடுத்தும் இணையதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோக்களை பார்த்த பலரும் இன்னும் அந்த தொட்டியில் கொஞ்சம் தண்ணீர் நிரப்பி வையுங்களேன். அந்த க்யூட் யானைகள் குடித்துவிட்டுப் போகட்டும் என்று கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.

வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் போல் தண்ணீர் குடித்துவிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு அமைதியான முறையில் கலைந்து சென்ற இந்த குட்டி யானைகளை பார்த்து பலரும் நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

VIDEO: "ஏனுங் அம்மணி.. தண்ணி இருக்குதுங்களா...".. சத்யராஜ் தங்கை வீட்டுக்கு வந்த யானை குட்டீஸ்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Elephant kovai comes to resident of poular actors sister video

People looking for online information on Elephant, Sathyaraj, Video, Viral will find this news story useful.