"DOOR-அ திறங்க BIGGBOSS.. இவ இருக்கணுமா.. நான் இருக்கணுமானு முடிவு பண்ணுங்க!".. நிரூப் ஆவேசம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: 84 நாட்களை நெருங்கி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனை விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அவர்களை பார்த்து விட்டுச் சென்றனர், வந்தவர்கள் போட்டியாளர்கள் பற்றி பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் கருத்துக்களையும் தங்களுடைய கருத்துக்களையும் கூறிவிட்டுச் சென்றனர்.

கமல்ஹாசன் அறிவுரை

கமல்ஹாசனும் இந்த பொறுப்பை முன்னெடுத்தார். பிக்பாஸ் போட்டியாளர்களை தனித்தனியே அழைத்து, ஒவ்வொருவரின் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி, இனி தங்கள் விளையாட்டை ஒவ்வொருவரும் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குறிப்பாக, அடுத்தவருக்காக விட்டுக் கொடுப்பது, அடுத்துவர் விளையாட்டில் கவனம் செலுத்துவது உள்ளிட்டவற்றை காட்டிலும் தங்களுக்கு முக்கியத்துவம் தருவது, தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விளையாடுவது குறித்து கமல்ஹாசன் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தினார்.

ஃபினாலே ரேஸ்

அந்தவகையில் போட்டியாளர்கள் இப்போது முன்பை விடவும் இன்னும் பட்டை தீட்டியது போல் ஷார்ப்பாக விளையாட தொடங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம். முன்னதாக பிரியங்கா, தாமரை, சஞ்சீவ் மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்த சம்பவம் பிக்பாஸ் வீட்டில் பிரபலமானது. இதில் பிரியங்கா சஞ்சீவ் இருவரும் தாமரையிடம், ஜெயிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறதா என்பது பற்றி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த தாமரைச்செல்வி, “மற்றவர்கள் ஜெயித்தாலும் மகிழ்ச்சிதான் .. மக்கள் என்னை ஜெயிக்க வைத்தாலும் எனக்கு சந்தோஷம்தான்!” என்று கூறி வந்தார். எனினும், “மற்றவர்களை விடு. நீ ஜெயிக்க வேண்டுமா .. இல்லையா?” என்று பிரியங்கா அழுத்தம் திருத்தமாக கேட்டபோது, தாமரை , “இல்லை எனக்கு ஜெயிக்க வேண்டாம்!” என்று விரக்தியாக தெரிவித்தார்.

டின்னர் டேபிள் நாமினேஷன்

இதனைத் தொடர்ந்து புதிய அறிவிப்பு ஒன்றை பிக்பாஸ் சொல்லி இருக்கிறார். அதன்படி ஒரு டின்னர் டேபிளில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த அறிவுறுத்தலின்படி, டின்னர் சாப்பிட்டுக்கொண்டே, இந்த போட்டியாளர்களில் இருந்து ஒருவரை ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேட் செய்யவேண்டும், அத்துடன் அதற்கான காரண காரியங்களை விளக்கவும் வேண்டும் என்பதுதான்.

இதில், பிரியங்கா நிரூப்பிடம் பேசும்போது, “ஃபினாலேவுக்கான டிக்கெட் உனக்கு கிடைக்க கூடாது என்பதுதான் எனக்கு தோன்றுகிறது, ஏனென்றால் உன்னை போல் உடல் அளவில் வலிமையுடைய ஒருவனுடன் என்னால் போட்டி போட முடியாது! என்று தெரிவித்தார்.

உன்கூட போட்டி போட முடியாது!

இதற்கு ஆவேசமான நிரூப்,  “நான் உன்னுடன் போட்டி போட முடியாது என்று எங்கேயும் தெரிவிக்கவில்லை.

ஆனால் நீ இவ்வளவு நேரடியாக என்னுடன் போட்டி போட முடியாது என்று தெரிவிக்கிறாய்..” .. என்று கூற, இதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, “நான் உன்னுடன் போட்டி போட முடியாது என்று கூறவில்லை. உன்னை போல் ஒரு ஆள் விலகி நின்றால் பாக்கி இருக்கும் ஏழு பேருடன் போட்டி போட்டு நான் வரலாம் அல்லவா?” என்று கேட்கிறார்.

அவ இருக்கணும்.. இல்ல நான் இருக்கணும்!

இதனால் இன்னும் கடுப்பான நிரூப், பிக்பாஸை அழைத்து, “பிக்பாஸ் இவள் என்னுடன் போட்டி போட முடியாது என்று சொல்கிறாள்.. நீங்கள் கதவை திறங்க.. இவள் இருக்க வேண்டுமா? நான் இருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்து இப்போது வெளியே அனுப்புங்கள்” என்று கத்துகிறார்.

இவர்களின் பேச்சுகள் எப்படி சென்று முடிய போகிறது என்று தெரியவில்லை. முன்னதாக பிரியங்கா மற்றும் நிரூப் இருவரின் வாக்குவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அதிகமாக இருந்தன. அவை கொஞ்ச நாள் குறைந்து இருந்திருந்தாலும் தற்போது மீண்டும் பிரியங்கா மற்றும் நிரூப் இடையேயான வாதங்கள் அதிகரித்துள்ளன. மீதமிருக்கும் இந்த கிராண்ட் ஃபினாலே நாட்களுக்குள் இவர்களுக்குள் அனல் தெறிக்கும் போட்டி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Also Read: “எனக்கு ஜெயிக்கவே வேண்டாம்” .. சஞ்சீவ், பிரியங்காவின் சரமாரி கேள்வி.. விரக்தியில் தாமரை சொன்ன பதில்!

Either priyanka or I should be in house niroop asks to open door

People looking for online information on Biggboss 5 tamil, BiggBossTamil5, Niroop priyanka fight, Niroop priyanka fight biggboss, Niroop priyanka fight biggboss5, Niroop priyanka fight biggboss5 tamil will find this news story useful.