விடுகதையா இந்த வாழ்க்கை..? செம ட்விஸ்ட்.. ஈரமான ரோஜாவே சீசன் 2 பரபரப்பு எபிசோடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'ஈரமான ரோஜாவே 2'.

Advertising
>
Advertising

பீஸ்ட் வெறித்தனம் overloaded… வெளியானது 5 மொழிகளின் போஸ்டர்!

முதல் சீசன் வெற்றி பெற்றதை போலவே, தற்போதைய இரண்டாம் சீசனும், பல திருப்பங்கள் மற்றும் பரபரப்புக்களுடன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான், பார்த்தி மற்றும் பிரியா ஆகியோருக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று, திருமண தேதியும் உறுதியானது.

மணப்பெண் எங்கே?

இதற்கு மத்தியில், பாரதியின் தம்பியான ஜீவாவும், பிரியாவின் தங்கையான காவ்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்தும் வருகின்றனர். தொடர்ந்து, திருமண தினத்தன்று மணமக்களின் குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்தில் கூடி இருக்கவே, மணப்பெண்ணை அழைத்து வரச் சொல்கிறார் ஐயர்.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்

ஆனால், ரூமில் சென்று தேடும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. மணப்பெண் பிரியாவை அறையில் காணவில்லை என்பதால் அனைவரும் அதிர்ந்து போகின்றனர். மறுபக்கம், பிரியாவை யாரோ ஒருவர் கடத்திச் சென்றும் விடுகிறார். பிரியாவுக்கு என்ன ஆகி இருக்கும் என்பது பற்றி, இவர்களாகவே ஒரு யூகத்தில் தப்பாக முடிவு செய்து விடுகின்றனர்.

காவ்யாவுக்கு வந்த வினை

பிரியாவின் குடும்பத்தினர் அசிங்கப்பட்டு நிற்கவே, அடுத்து என்ன முடிவு எடுப்பது என்பதை தெரியாமல் இருக்கும் போது தான், பிரியாவின் தங்கை காவ்யாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். இதனை அறிந்த காவ்யாவோ, கடும் வேதனையும், அதிர்ச்சியும் அடைய, என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போகிறார்.

கெஞ்சும் அப்பா

பார்த்தியிடம் உண்மையை சொல்ல காவ்யா முயற்சிகள் எடுத்தாலும், தந்தை கெஞ்சிக் கேட்ட பிறகு, பாரதியை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார். மணப்பெண்ணாக மாறி இருந்து, வேண்டா விருப்பமாக மேடையில் இருக்கிறார் காவ்யா.

இதனிடையே, இன்னொரு பக்கம் பிரியாவை காப்பாற்றி மண்டபத்திற்கு கொண்டு வரும் ஜீவா, அர்ஜுன் மற்றும் பார்த்தி ஆகியோருக்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், யாரும் அழைப்பினை ஏற்கவில்லை என தெரிகிறது.

ஷாக் மோடில் பிரியா, ஜீவா

வேகமாக ஆட்டோவில் ஏறி, மண்டபத்திற்கு இருவரும் செல்ல முயற்சிக்கவே, மண்டபத்தில் பார்த்தி தாலி கட்ட தயாரான நேரத்தில், அவர்கள் மண்டபமும் வந்து அடைகின்றனர். இதில் மண்டப வாசலில் பிரியா தடுக்கி விழவே, மீண்டு எழுந்து உள்ளே வருவதற்குள் காவ்யாவுக்கு தாலிக் கட்டி விடுகிறார் பார்த்தி.

வேற மாதிரி 'ட்விஸ்ட்'

இதனைக் கண்டதும் பிரியா மற்றும் ஜீவா ஆகியோர் நிலைகுலைந்து நிற்க, அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர். மிகப்பெரிய ஒரு திருப்புமுனை, ஈரமான ரோஜாவே 2 தொடரில் தற்போது நிகழ்ந்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரீல் டூ ரியல் ஜோடி.. 2 வருஷ 'லவ்'.. ஆதி - நிக்கி பகிர்ந்த வைரல் 'Engagement' ஃபோட்டோ..

தொடர்புடைய இணைப்புகள்

Eeramaana rojaave 2 parthi ties knot to kavya

People looking for online information on Eeramana Rojave 2 Serial, Eeramana Rojave 2 Serial Episode, Eeramana Rojave 2 Serial Promo, Vijay Television will find this news story useful.