இத்தனை நாளா 'லீவ்' விட்ருந்தீங்க போல ... மீம் போட்டு 'கிண்டலடிக்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் பல்வேறு வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக போட்டியாளர்கள் தூங்கும்போது நாய் கத்தியதை நேற்று பார்க்க முடிந்தது. 50 நாட்களை பிக்பாஸ் கடந்த நிலையில் நாய் இதுவரை கத்தி யாரும் கேட்கவில்லை. நேற்று கேப்டன் ரியோ வெளியே இருந்தபோது நாய் கத்தியது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்க்க, யாரும் தூங்கவில்லை என அர்ச்சனா சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் நிவார் காரணமாக போட்டியாளர்கள் அனைவரும் எலிமினேட் செய்யப்பட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதற்குமுன் மூன்று சீஸன்களிலும் இதுபோன்ற எந்தவொரு இயற்கை பேரிடரும் இல்லை என்பதால் இதுவே போட்டியாளர்கள் அனைவரும் முதன்முறையாக வெளியேறிய சம்பவமாக உள்ளது. வீட்டின் கேப்டனை நாமினேட் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் கேப்டன் ரியோ நேற்று ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். இது எதனால் என்பது தெரியவில்லை. இதுபோல பல்வேறு வரலாற்று சம்பவங்கள் நேற்று பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Due to Cyclone Contestants exits from Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.