எஸ்பிபி கவலைக்கிடம் - இயக்குநர்கள் பாரதிராஜா, வெங்கட் பிரபு மருத்துவமனைக்கு வருகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமைடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள் பலரும் அவர் குறித்து பெருமிதம் தெரிவித்து அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் இன்று பாடகர் எஸ்பிபியின் மனைவி சாவித்ரி, மகன் எஸ்.பி.பி.சரண், மகள் பல்லவி உள்ளிட்டோர் மருத்துவமனை வந்துள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் தற்போது மருத்துவமனை வந்துள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, அவர் எனக்கு 50 ஆண்டு கால நண்பர். சிறந்த மனிதர். வருத்தம் இருக்கும் வார்த்தைகள் வராது என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Venkat Prabhu and Bharathiraja rush to hospital for SP Balasubrahmanyam | எஸ்பி பாலசுப்ரமணியத்தை காண பாரதிராஜா, வெங்கட் பிரபு மருத்துவமன

People looking for online information on Bharathiraja, SP Balasubrahmanyam, SPB, Venkat Prabhu will find this news story useful.