BREAKING : அடுத்ததாக இந்த ஹீரோவுடன் இணையும் சுந்தர்.சி.!! - படத்தைய பற்றிய தெறி விவரங்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுந்தர்.சி அடுத்து தான் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் நகைச்சுவை பாணியில் இயக்கிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. தற்போது இவர் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதுமட்டுமின்றி, இவர் ஹீரோவாக நடித்தும் கலக்கி வருகிறார்.

இதனிடையே சுந்தர்.சி அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. அடுத்ததாக சுந்தர்.சி, நடிகர் ஜெய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை சுந்தர்.சியின் இணை இயக்குநரான் பத்ரி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் சிவா நடித்த தில்லு முல்லு., சுந்தர்.சி நடிப்பில் உருவான வீராப்பு, ஐந்தாம் படை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தை சுந்தர்.சியின் சொந்த நிறுவனமான அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள், 

Tags : Sundar C, Badri, Jai

தொடர்புடைய செய்திகள்

சுந்தர்.சி நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு | Director sundar.c to act in this films next with this hero

People looking for online information on Badri, Jai, Sundar C will find this news story useful.