"இது பொய்யான செய்தி.. கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது... இயக்குனர் ஷங்கர் அவசர அறிக்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர்பெற்ற இயக்குனர் ஷங்கர் இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே அவரை நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம். தற்போது கமல்ஹாசனுடன்  “இந்தியன் 2” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் எடுத்த எந்திரன் முதல் பாகம் படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து "இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று  எழும்பூர் மாஜிஸ்திரேட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்" என்ற பொய்யான தகவல் பரவியது. இது பற்றி ஷங்கர் தற்போது முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது "எழும்பூர்‌ நீதிமன்றம்‌ எனக்கு எதிராக பிடிவாரண்ட்‌ பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப்‌ பார்த்து நான்‌ அதிர்ச்சியடைந்தேன்‌. எனது வழக்கறிஞர்‌ இரு.சாய்‌ குமரன்‌, நீதிமன்றத்தை இன்று
அணுகி இந்தச்‌ செய்தி குறித்து அவர்களின்‌ கவனத்துக்குக்‌ கொண்டு சென்றார்‌. எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும்‌ பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்‌.

இணையத்தில்‌ தினசரி நீதிமன்ற வழக்குகளின்‌ நிகழ்வுகள்‌ பதிவேற்றுதலில்‌ நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம்‌ நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல்‌ இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப்‌ பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த விஷயம்‌ எனது குடும்பத்துக்கும்‌, நல விரும்பிகளுக்கும்‌ தேவையில்லாத மன உளைச்சலைத்‌ தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள்‌ இனி பரவாது என்பதை உறுது செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும்‌ பகிர வேண்டும்‌ என்று தயவுகூர்ந்து அன்‌போடு கேட்டுக்கொள்கிறேன்‌" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director shankar issue press release on controversy இயக்குனர் ஷங்கர் அவசர அறிக்கை

People looking for online information on Enthiran, Shankar will find this news story useful.