நடிகர் விஜய்யுடன் 5 வருடமாக உறவு இல்லையா? - மனம் திறந்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு இருந்த தகவல் நேற்று வந்தது. நடிகர் விஜய் இந்த கட்சியை துவங்கியதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால் அந்தக் கட்சியை பதிவு செய்தது, தான், தான் என்று விஜய் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்தார். அடுத்த திருப்பமாக.. அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்றும் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒன்று நீங்களும், நடிகர் விஜய்யும் ஐந்து ஆண்டுகளாக பேசிக்கொள்வதில்லை என்று ஒரு செய்தி அடிபடுகிறதி என்று கேட்டதற்கு, கொரோனா நேரத்தில் கூட மூன்று முறை சந்தித்தேன். ஆனால் இப்படி பலரது கற்பனைக்கெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது" என்று கூறினார். மேலும் "மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சியைப் பதிவு செய்துள்ளேன். இது அவரது பெயரில் புதிதாக துவங்கப்பட்டது கிடையாது.​ ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கட்சியை பதிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

Tags : Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Director SAC opens up about relationship with vijay விஜய் பற்றி மனம் திறந்த இயக்குனர் எஸ்ஏசி

People looking for online information on Vijay will find this news story useful.