சூர்யாவின் 'சில்லுக்கருப்பட்டி' படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சில்லுக்கருப்பட்டி' திரைப்படம் இன்று முதல் (டிசம்பர் 27) அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. டிவைன் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.

4 மாறுபட்ட காதல் கதைகள்  கொண்ட இந்த படத்தில் அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன்,  பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், மிக சரியாக கோர்க்கப்பட்ட நான்கு கதைகள்! மனிதத்தின் தேவை அன்பு !!! திரை முழுக்க கடத்தி, பார்வையாளர்களை தித்திக்க வைத்திருக்கிறது. இந்த சில்லுக்கருப்பட்டி சுவைக்க தந்த ஹலீதா ஷமீம், சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா குழுவினர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Pa.Ranjith tweets about Suriya's Sillukarupatti

People looking for online information on Samuthirakani, Sillu Karupatti, Suriya will find this news story useful.