இயக்குநர் மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு..! ''முதல்முறையாக இப்படியோர் விஷயம்.. ஒரே ஆச்சர்யம்.!''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மிஷ்கின் தற்போது புதிதாக எடுத்துள்ள முடிவு சோஷியல் மீடியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். தனது வித்தியாசமான கதைகள் மற்றும் மேக்கிங்கால் இவர் பிரபலமடைந்தார். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இவர் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதுநாள் வரை, எந்த சமூக வலைதளங்களில் இல்லாமல் இருந்து வந்த மிஷ்கின், தற்போது முதல்முறையாக ட்விட்டரில் இணைந்துள்ளார். முதல் முறை சோஷியல் மீடியாவில் மிஷ்கின் இணைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் வெல்கம் மிஷ்கின் என கமன்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். மிஷ்கின் தற்போது அருண் விஜய் நடிக்கும் படத்தையும், அடுத்து சிம்பு நடிக்கும் படத்தையும் இயக்கிவிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ட்விட்டரில் இணைந்த இயக்குநர் மிஷ்கின் | Director Mysskin joins in Twitter officially

People looking for online information on Director Mysskin, Mysskin will find this news story useful.