EXCLUSIVE : ''கர்ணன்-ல ஒரு காட்சி எடுக்கும் போது..'' - படத்தின் மேக்கிங் பற்றி சொல்லும் மாரி செல்வராஜ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்கள் குறித்து நம்மிடம் மனம் திறந்து பேசினார். 

2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தற்போது தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் தற்போது பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதையடுத்து, இயக்குநர் மாரி செல்வராஜ் நம்மிடம் விரிவாக பேசினார். அப்போது பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் பல விஷயங்களை தெரிவித்தார். மேலும் கர்ணன் திரைப்படம் பற்றி பேசிய அவர், ''நான் இந்த கதை எழுதும் போதே, தனுஷின் முகம் வந்துவிட்டது. தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தின் தத்துவத்தை அறிந்த நடிகர் அவர். நானே ஒரு காட்சியின் ஒரு சிறிய விஷயத்தை சொன்னாலும், கர்ணன் இதை செய்யலாமா என கேள்வி கேட்பார். அந்த அளவுக்கு அவர் கர்ணன் கதாபாத்திரத்தை புரிந்து வைத்துள்ளார்'' என்று தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

EXCLUSIVE : ''கர்ணன்-ல ஒரு காட்சி எடுக்கும் போது..'' - படத்தின் மேக்கிங் பற்றி சொல்லும் மாரி செல்வராஜ். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷின் கர்ணன் பற்றி மாரி செல்வராஜ் | Director Mari selvaraj opens on dhanush's karnan and pariyerum perumal

People looking for online information on 2 Years of Pariyerum Perumal, Dhanush, Karnan, Mari Selvaraj, Pariyerum Perumal will find this news story useful.