தனுஷ் நடிக்கும் கர்ணன்.. ''ரொம்ப ஸ்பெஷலான படம்..'' - மனம் திறந்த மாரி செல்வராஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததுடன் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களை பெற்றது. இப்போது இவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது. 

இந்நிலையில் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் படம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு மிகவும் நெருக்கமான, முக்கியமான ஒரு திரைப்படம் கர்ணன். இத்திரைப்படம் என்னிடம் இருந்தும் என்னுடன் பயணித்தவர்களிடம் இருந்து பெரும் விடாமுயற்சியை எதிர்ப்பார்த்தது. அதை சாத்தியமாக்கிய தனுஷ், தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் உதவி இயக்குநர்கள், எனது கிராம மக்கள் அனைவருக்கும் நன்றி'' என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் இது ஒரு மறக்கமுடியாத பயணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷின் கர்ணன் பற்றி மாரி செல்வராஜ் | Director mari selvaraj note on dhanush karnan movie

People looking for online information on Dhanush, Karnan, Mari Selvaraj will find this news story useful.