இயக்குநர் ‘ஆச்சார்யா’ ரவி மரணம்!! தொடரும் சோகத்தால் கலங்கி நிற்கும் திரையுலகம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் இயக்குனர் ஆச்சார்யா ரவி, இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள தகவல் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இயக்குனர் ஆச்சார்யா ரவி,  'ஆச்சார்யா' எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் விக்னேஷ், திவ்யா, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இந்த திரைபடத்தை இயக்கியதால் இயக்குநர் ரவி, ஆச்சார்யா ரவி என அழைக்கப்பட்டார். 

அதன் பின்னர், காஞ்சிபுரத்தில் வசித்து வந்த இவர், அண்மைக்காலமாகவே உடல்நலக்குறைவால், மதுரையை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இயக்குநர் ஆச்சார்யா ரவியின் மறைவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் பாடகர் மாணிக்க விநாயகத்தின் மறைவு, நடன இயக்குநர் சிவசங்கரின் மறைவு, முன்னதாக இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், இயக்குநர் கே.வி.ஆனந்த், அண்மையில் மாநகர காவல் பட இயக்குநர் தியாகராஜனின் மறைவு என இவ்வருடம் நிகழ்ந்த திரைக்கலைஞர்களின் மறைவு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read: "Door-அ திறங்க BiggBoss.. இவ இருக்கணுமா.. நான் இருக்கணுமானு முடிவு பண்ணுங்க!".. நிரூப் ஆவேசம்!

Director acharya ravi passes away இயக்குநர் ஆச்சார்யா ரவி

People looking for online information on Acharya ravi passes away, இயக்குநர் மரணம், Director acharya ravi dead, Director acharya ravi passed away will find this news story useful.