"நீலாம்பரி மாதிரி இல்லயே".. "சொடுக்கு போட்டு கூப்டா உங்களுக்கு தான் கேவலம்".. கண்ணீரில் அக்‌ஷரா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் பிரபல திரைப்பட கேரக்டர்களை போல வேடமணிந்து புதிய டாஸ்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

இதில் எம்.ஆர்.ராதா போல ராஜூ வேடமிட்டு இருக்கிறார். சிவாஜி மாதிரி இமான் அண்ணாச்சியும், படையப்பா ரஜினி மாதிரி சிபியும், படையப்பா நீலாம்பரி போல அக்‌ஷராவும் வேடமிட்டு இருக்கின்றனர். இதேபோல் இசைவாணி சந்திரமுகி போன்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.

தெய்வத்திருமகள் விக்ரம் போல அபினய் வேடம் தரித்து இருக்கிறார். நிரூப் அந்நியன் போன்று வேடம் தரித்து இருக்கிறார். இம்சை அரசன் போன்று மதுமிதா வேடம் தரித்திருக்கிறார். பாவனி கஜினி வேடம் தரித்து பர்ஃபார்மன்ஸ் பண்ணியிருந்தார். இப்படி பலரும் பல்வேறு விதமாக வேடம் போட்டு இருக்க அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பர்ஃபார்மென்ஸ் செய்ய வேண்டும்.

முக்கியமாக ஒருவர் பர்ஃபார்மன்ஸ் பண்ணும்போது மற்ற போட்டியாளர்கள் தங்கள் கேரக்டரில் இருந்து வெளியே வரக்கூடாது என்பது முக்கியமான விதி. இந்த நிலையில் மின்சார பூவே பாடலுக்கு அக்‌ஷரா மற்றும் சிபி இருவரும் நடனம் ஆடினர்.

அதன்பின்னர் அக்‌ஷராவிடம் பேசிய இமான் அண்ணாச்சி,  “ஒரு இடத்தில்கூட நீலாம்பரி போல் நீங்கள் என்னிடம் பேசவில்லை” என்று கூறினார். இதேபோல் அவர் பார்ப்பதற்கும், நடனம் ஆடியபோதும் நீலாம்பரி போல நடந்து கொள்ளவில்லை என்று அனைத்து போட்டியாளர்களும் முன்னிலையில் இமான் கூறியிருந்தார்.

இதற்கு அக்‌ஷரா கண்களில் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். அதன் பின்னர் இமானிடம் தனியே பேசும் பொழுது, “நான் நீலாம்பரி போல் சொடக்கு போட்டு (செய்து காட்டுகிறார்) உங்களை அழைத்தால் அது உங்களுக்கு கேவலமாக இருக்கும்.  அப்படி நான் செய்ய முடியாது அண்ணாச்சி!” என்று அக்‌ஷரா விளக்கினார். எனினும் மற்ற போட்டியாளர்கள் அக்‌ஷரா நீலாம்பரி போலவே செய்ததாகவும் குறிப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Didnt match neelampari imman criticise akshara biggbosstamil5

People looking for online information on Akshara, Akshara Reddy, BiggBossTamil5, ImmanAnnachi, Neelampari, Niroop, Padaiyappa, Rajini, Vijaytv will find this news story useful.