பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் PHONE பயன்படுத்தினாரா ரியோ... வைரலாகும் போட்டோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தின எபிசோடில் ரியோவின் கையில் செல்போன் போன்ற ஒரு பொருள் இருந்ததையும், அதை அவர் காதில் வைத்து கேட்பதையும்  பார்க்க முடிந்தது. உடனே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் அது நிச்சயம் மொபைல் போன் தான். பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் போன் வந்தது எப்படி என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். சமீபத்தில் இதே போல சோம் மொபைல்போன் பயன்படுத்தினார் என்பது போல ஒரு சர்ச்சை கிளம்பியது. கடைசியில் அது மொபைல் போன் இல்லை என்று ரசிகர்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோல் சிலர் கூறுகையில் அது மொபைல் போன் இல்லை. மைக்கின் பேட்டரி. அது வேலை செய்கிறதா என்பது போல காதல் வைத்து கேட்கிறார் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் PHONE பயன்படுத்தினாரா ரியோ... வைரலாகும் போட்டோ...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Did rio used mobile phone in biggboss மொபைல் Phone பயன்படுத்தினாரா ரியோ

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.