ஐதராபாத்தில் நடந்த நடிகர் தனுஷின் அடுத்த பட பூஜை..! ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு இயக்குனருடன் நடிகர் தனுஷ் இணையும் புதிய படம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரபமான தனுஷ், தனது திறம்பட நடிப்பால் அடுத்தடுத்து ஏராளமான ஹிட் படங்களை தமிழில் கொடுத்த தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்தும் கால் பதித்திருந்தார். நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமையும் உள்ளவ தனுஷ், கடைசியாக தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவற்றை தொடர்ந்து வாத்தி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட சில திரைப்படங்கள் தனுஷின் கைவசம் உள்ளன. தேசிய விருதுபெற்றுள்ள நடிகர் தனுஷின் அடுத்த படம் குறித்த ஆவல் எப்போதுமே ரசிகர்களிடம் உண்டு. இந்நிலையில்தான், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் மும்மொழி படத்தின் பூஜை நடந்துள்ளது. ஐதராபாத்தில் நடந்துள்ள இந்த பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. 

இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்ததாக, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் 'வாத்தி' திரைப்படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush sekhar kammula movie pooja ceremony தனுஷ்

People looking for online information on Dhanush, Sekhar Kammula will find this news story useful.