"அறம் வெல்லும்".. ஏன் சம்மந்தமே இல்லாம இங்க பேசுறீங்க?.. தனா முன்வைத்த கேள்வி.. விக்ரமன் பதில்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "நான் போனதுக்கப்புறம் அவ Focus கம்மி ஆயிடுச்சு".. ரச்சிதா பற்றி பேசிய ராபர்ட் மாஸ்டர்.. Bigg Boss

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமியும், மணிகண்டாவும் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோர், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது பல போட்டியாளர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது. அனைவரும் அவர்களை கட்டித் தழுவி வரவேற்றிருந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

இதனிடையே, தற்போது போட்டியாளர்கள் பிக் பாஸ் இடத்தில் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, ADK முதலில் பிக் பாஸ் போல மாறி போட்டியாளர்களை வழி நடத்தி இருந்தார். மேலும் அவருக்கு தோன்றும் டாஸ்க்குகளை கூட கொடுக்கலாம் என தெரிகிறது.

இதனிடையே, பிக் பாஸ் போல கொஞ்ச நேரத்திற்கு மாறிய ஷிவின், தனலட்சுமி, சாந்தி உள்ளிட்டோரை குழந்தைகள் போல மாற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து, குழந்தை போலவே பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த தனலட்சுமி, விக்ரமனிடம் சில கேள்விகளை முன் வைத்திருந்தார். முன்னதாக, ஜிபி முத்து, ராபர்ட் உள்ளிட்டோருக்கு விக்ரமன் ஆத்திசூடி சொல்லிக் கொடுத்து கொண்டிருக்க, தனலட்சுமி அங்கே வருகிறார்.

அப்போது குழந்தை போல பேசும் தனலட்சுமி, "அறம் வெல்லும்னா என்ன அங்கிள்?. சம்பந்தமே இல்லாம ஏன் அங்கிள் இங்க சொல்றீங்க?" என்றும் கேட்கிறார். இதற்கு விளக்கம் கொடுக்கும் விக்ரமன், "நான் கரெக்டா சொல்லிட்டு இருக்கேன். அறம் வெல்லும்னா, நம்ம செய்யக்கூடிய நல்ல விஷயங்கள், நல்ல எண்ணங்கள், இந்த எண்ணம் போல் வாழ்க்கை இருக்குல்ல, அது மாதிரி நல்ல எண்ணங்கள் வெல்லும்" என்றும் தெரிவிக்கிறார்.

Also Read | "நடுக்கடல்ல 30 கோடி ரூபாய்க்கு வீடு".. கலாய்த்த அசிம், ADK.. ஜிபி முத்து கொடுத்த Thug Life 😅!!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi questions about aram vikraman explained in bigg boss

People looking for online information on ADK, Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalakshmi, Vikraman will find this news story useful.