BIGG BOSS 6 TAMIL : "தள்ளிவிட்டது தனலட்சுமியா.?" குறும்படத்தை போட்டு பரபரப்பு முடிவை அறிவித்த கமல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் முடிவடைந்த பின்னர், தற்போது சண்டை, விவாதம் என அனைத்தும் ஓய்ந்து தற்போது மீண்டும் போட்டியாளர்கள் கலகலப்பாக இருக்க தொடங்கி உள்ளனர்.

Advertising
>
Advertising

முன்னதாக பொம்மை டாஸ்க் ஆரம்பித்த நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டு தான் இருந்தனர்.

அதிலும் குறிப்பாக, பொம்மை டாஸ்க்கிற்கு மத்தியில் சில போட்டியாளர்கள் இடையே சிக்கிக் கொண்ட ஷெரினா, கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரியும் நிலையில், இதற்கு காரணம் தனலட்சுமி தான் என அசீம், மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் குற்றம் சுமத்தி இருந்தனர். மறுபக்கம், விக்ரமன் உள்ளிட்ட சிலர் தனலட்சுமிக்கு ஆதரவாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

பொம்மை டாஸ்க் முழுக்க முழுக்க ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விட்டார் என்பதை பற்றி தான் வலம் வந்திருந்தது. அப்போது பேசி இருந்த தனலட்சுமி, ஷெரினாவை நான் தள்ளி விட்டதாக உறுதியானால் அனைவரின் காலில் விழுந்து வெளியே போகவும் தயாராக இருக்கிறேன் என்றும் சக போட்டியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதனால், வார இறுதியில் கமல்ஹாசன் வரும் போது தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டாரா அல்லது வேறு வழியில் ஷெரினா கீழே விழுந்திருப்பாரா என்பது தெரிய வரும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர். அது மட்டுமில்லாமல், சமீபத்தில் வெளியாகி இருந்த ப்ரோமோ கூட, ஷெரினா கீழே விழுந்தது தொடர்பான குறும்படத்தை கமல்ஹாசன் காண்பிக்க போவதை உறுதி செய்யும் வகையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் வார இறுதியில் வந்த கமல்ஹாசன், செரீனாவை தனலட்சுமி தள்ளி விட்டதை யார் பார்த்தீர்கள்? யார் பார்க்கவில்லை? தனலட்சுமி தள்ளி இருப்பார் என யார் நம்புகிறீர்கள்? யார் நம்பவில்லை? என சகல கேள்விகளையும் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ் ஆக கேட்டு விடைகளை வாங்கினார். இவர்களுள் அசீம், ஏ டி கே ஆகியோர் தனலட்சுமி தள்ளினார் என்றும் குற்றம் சாட்டினர்.  இதில் ஏடிகே, தனலட்சுமிக்கு  தனிப்பட்ட வஞ்சகம் இருக்கிறது என்று கூறினார். செரினா உள்ளிட்டோர் தனலட்சுமி தள்ளி இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்புவதாக தெரிவித்தனர்.

விக்ரமனை பொருத்தவரை இது ஒரு விபத்து என்று தன்னுடைய கருத்தை முன் வைத்தார். முன்னதாக இது குறித்து விசாரித்த கமல் அசீமை கேட்டபோது, அவரோ முதலில் தனலட்சுமி வஞ்சகத்தில் தள்ளவில்லை என்று கூறினார். அப்போது அமுதவாணன் சிரிக்க அவரிடம், "ஏன் சிரிக்கிறீங்க அமுதவாணன்?" என்று கமல் கேட்டார். அதற்கு அமுதவாணனும், "இல்லை.. தனலட்சுமிக்கு வஞ்சகம் இருப்பதாகவே அசிம் அந்த சண்டையில் கூறினார். மேலும், நீ எல்லாம் ஒரு பெண்ணா என்றெல்லாம் சொல்லித் திட்டினார். இப்போது மாற்றி பேசுகிறார்" என்று அமுதவாணன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தனலட்சுமியை மிக நீண்ட நேரம் விசாரித்த கமல், "மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். குறும்படம் போட்டு விடவா?" என்று சொன்னார். அனைவர் முன்னிலையிலும் குறும்படத்தை போட்ட கமல் குறும்படம் பற்றி ஒவ்வொரவரிடமும் விசாரித்தார். அதில் அனைவருக்குமே தெரியவந்த விஷயம், தனலட்சுமி செரினாவை பிடித்து தள்ளவில்லை. செரினாவின் கையில் இருந்த பொம்மையை ஜனனி இழுக்கிறார். நிவாசினி செரினா மீது விழாமல் தள்ளி விடுகிறார்.‌

இந்த குறும்படத்தை இரண்டு முறை மீண்டும் கேட்டு வாங்கி பார்த்த ஹவுஸ் மேட்ஸ் இவற்றை விளங்கிக் கொண்டனர். அப்போது பேசிய கமல், "இப்படியான சம்பவங்கள் எப்போதுமே ஸ்போர்ட்ஸில் நடக்கும். யாராவது ஒருவர் இதில் ஒருவரை தள்ளி விட்டார்கள் என்றால் யாரும் இல்லை. பள்ளி விடுவது போல் ஒருவரின் கை இன்னொருவர் மீது இருக்கிறது என்றால் செரீனாவின் கை தான் தனலட்சுமி மீது இருக்கிறது. ஆனால் தனலட்சுமி தள்ளவில்லை. இந்த குறும்படம் போடக்கூடிய வாய்ப்பு இருந்தது. இது இல்லையென்றால் இந்த வீட்டை விட்டு போகும் வரை தனலட்சுமி இந்த பழியுடனேயே இருந்திருக்க வேண்டும்" என கமல் தனது முடிவை அறிவித்தார் அனைவரும் தனலட்சுமிக்கு ஆதரவாக கைத்தட்டினர். தனலட்சுமி நெகழ்ந்து போனார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi didnt pull Sherina Kamal reveals bigg Boss 6 tamil

People looking for online information on BB6 Tamil, BIGGBOSS TAMIL, Dhanalakshmi, Kamal Haasan, Sherina will find this news story useful.