"நீங்க முதல்ல, ரூல்ஸ FOLLOW பண்ணுங்க"... BIGG BOSS-க்கு தனலட்சுமி அட்வைஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பரபரப்பான கட்டங்களுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | டோலிவுட் To பான் இந்தியன் ஸ்டார்..‌ நடிகர் பிரபாஸின் 20 ஆண்டு கால திரை பயணம் ...!

போட்டியாளர்கள் மாறி மாறி கலகலப்பாக இருக்கும் அதே வேளையில், டாஸ்க் என வந்து விட்டால் அங்கே பல சண்டைகள் உள்ளிட்ட விஷயங்கள் தான் அரங்கேறுகிறது.

முதல் இரண்டு வாரங்கள் ஜாலியாகவும், சில நேரங்களில் சண்டை போட்டும் வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் மூன்றாவது வாரம் ஏகப்பட்ட சண்டைகள் வெடித்திருந்தது.

இதற்கு காரணம் பொம்மை டாஸ்க் பெயரில் போட்டியாளர்கள் இடையே நடந்த தள்ளு முள்ளு தான். இதில் சிக்கி ஷெரினா கீழே விழுந்து காயம் ஏற்பட, பின்னர் எல்லாமே தலைகீழாக மாறி இருந்தது. இரண்டு தரப்பாக பிரிந்து கொண்டு தொடர்ந்து இந்த விவகாரத்தில் சண்டை போட்டும் வந்தனர். இதன் பின்னர் வார இறுதியில் வந்த கமல், அனைத்திற்கும் தீர்வு கண்டிருந்தார்.

தொடர்ந்து, மீண்டும் கலகலப்பான மோடில் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் போதே தற்போது ஃபேக்டரி டாஸ்க் என்ற பெயரில் தொடர்ந்து பல்வேறு சண்டைகள் அரங்கேறியும் வருகிறது. இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

இதில், மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் பொருட்களை கன்வேயரில் இருந்து எடுக்கும் போது அவர்களுக்கு இடையே சண்டையும் ஏற்பட்டு மாறி மாறி முட்டி மோதிக் கொள்கின்றனர். சக போட்டியாளர்கள் அவர்களை தேற்றவும் முயற்சி செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து, அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோரும் வார்த்தை போரில் ஈடுபடுகின்றனர்.

பெர்சனலாக தாக்கி பேசுவதாக விக்ரமன் அமுதவாணனை குறிப்பிட, மறுபக்கம் விக்ரமன் பொய் பேசுவதாகவும் அமுதவாணன் தெரிவிக்கிறார். இதுவும் நீண்டு கொண்டே போக பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பல களேபரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

அப்படி ஒரு சூழலில், இப்போது தனலட்சுமியின் அணியில் உள்ள அசீம், கன்வேயரில் அட்டை பாக்ஸ் வரும்போது, கையை உள்ளே விட்டு எடுப்பதற்கு அமுதவாணன் உதவினார். அப்போது கன்வேயரின் மீது படுத்து அசீம் கைகளை உள்ளே விட்டும் எடுக்கவில்லை. இதை அடுத்து முந்தைய நாள் ராம், தற்போது அசீம் என இருவரையும் தங்கள் அணியில் வைத்திருந்தது தவறு என தனலட்சுமி, அமுதவாணனிடம் பேசுகிறார், முன்னதாக, தான் கையை உள்ளே விட்டு முயற்சி செய்தும், அட்டையை எடுக்க முடியவில்லை என தனலட்சுமியிடம் அசீம் விளக்கம் அளித்தார். ஆனால் தனலட்சுமியோ, ‘இங்கு கன்வேயரின் மீது படுப்பது முக்கியம் இல்லை’ என கூறினார். இதன் பின்னர் அசீம் குறித்து குயின்சியிடமும் ஆதங்கப்பட்டு பேசுகிறார் தனலட்சுமி.

இப்படி ஃபேக்டரி டாஸ்க்கிலும் ஏராளமான விஷயங்கள் பேசு பொருளாக மாறி வரும் நிலையில், பிக் பாஸ் முன்பு தனலட்சுமி புகார் அளிக்கும் விஷயமும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்வேயர் வழியாக வரக்கூடிய பொருட்கள் விபரங்கள் குறித்த துடுப்பு அட்டைகளை சிலர் கன்வேயர் மீது ஏறி படுத்து உள்ளே சென்று எடுத்துக் கொள்வது பற்றி தனலட்சுமி பிக் பாஸ் கேமரா முன் புகார் அளிக்கிறார்.

மேலும் தன்னுடைய அணி அவ்வாறு செய்யவில்லை என்றும், எதிர் அணியினர் அப்படி செய்கிறார்கள் என்றும் குறிப்பிடும் தனலட்சுமி, "நீங்கள் சொன்னதால் மட்டும் தான் நான் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுகிறேன்.. ஆனால் இந்த மாதிரி உள்ளே சென்று அட்டைகளை எடுப்பவர்களுக்கு உரித்தான பொருட்களை ஸ்டோர் ரூமுக்கு அனுப்பக்கூடாது. எங்களுக்குச் சொன்ன ரூல்ஸை நீங்கள் முதலில் பின் தொடர வேண்டும்" என்று கேமராவை நோக்கி பிக் பாஸிடம் கறாராக சொல்லுகிறார்.

Also Read | "Government- ஏ எனக்கு ஒரு Call-ல".. உதயநிதி முன்பு Love Today பிரதீப் ஜாலி பேச்சு!!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi asked bigg boss to follow rules factory task

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Factory task, Vijay Television, Vijay tv will find this news story useful.