"எப்பவும் உங்களுக்காக இருப்பேன்".. தனா, விக்ரமன் நடுவுல இப்டி ஒரு எமோஷனல் பக்கமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "முந்துன சீசன்ல வந்த சில பேரை எனக்கு புடிக்காது".. காரணங்களை லிஸ்ட் போட்ட ஜிபி முத்து!!..

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து சுமார் நூறு நாட்களை கடந்துள்ள நிலையில், மொத்தமாக ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர். முன்னதாக கதிரவனும் இறுதி சுற்று வரை முன்னேறி இருந்த நிலையில், அவர் 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பணப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதன் தொகையும் கணிசமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் எந்த போட்டியாளராவது அதனை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

அதே வேளையில் Finale நெருங்கி வருவதால் எந்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என்பதையும் பலரும் கணித்து தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரும் சூழலில் பல போட்டிகள் மாறி மாறி ஒருவருக்கொருவர் மனம் நெகிழ வைக்கும் கருத்துக்களையும், விஷயங்களையும் தெரிவித்தும் வருகின்றனர். அடிக்கடி சண்டை மற்றும் வாக்குவாதம் நடக்கும் அதே பிக் பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களாக மிகவும் எமோஷனல் நிறைந்த தருணமாகவும் மாறி உள்ளது.

அப்படி ஒரு சூழலில், விக்ரமனிடம் பேசும் தனலட்சுமி, "அண்ணா இப்ப இருக்கிற மைண்டுக்கு எனக்கு யார் ஜெயிச்சாலும் ஓகே தான். சூப்பரா வின் பண்ணிட்டு வாங்க. என் நம்பரை வாங்கிக்கோங்க, நான் உங்க நம்பர வாங்கிக்கிறேன்" எனக் கூறிவிட்டு அவரைக் கட்டியணைத்து வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

அந்த சமயத்தில் தனலட்சுமியிடம் பேசும் விக்ரமன், "நீங்க உங்களோட தைரியத்தையும், பேசுறதையும், கோபத்தையும் யாருக்காகவும் விட்டுறாதீங்க. அப்படி உங்களுக்கே ஒரு கட்டத்துல விடணும்னு தோணுச்சுன்னா எனக்கு கால் பண்ணுங்க. நான் எப்பவுமே உங்களுக்காக இருப்பேன். எதுவா இருந்தாலும் தயங்காம எனக்கு கால் பண்ணுங்க, நான் இருப்பேன். சிஸ்டர்ங்குறத எல்லாம் தாண்டி ஒரு நல்ல ஃப்ரெண்ட்" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இறுதியில் பேசிய தனலட்சுமி, நீங்கள் அப்போது பேசியது மிகவும் எமோஷனலாக உணர வைத்ததாகவும் விக்ரமனிடம் மனம் கலங்க குறிப்பிட்டு இருந்தார். விக்ரமன் மற்றும் தனலட்சுமி ஆகியோர், பிக் பாஸ் வீட்டில் நிறைய முறை சிறிய சிறிய வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ரீ என்ட்ரி கொடுத்த தனலட்சுமி, விக்ரமன் மீதான தனது விமர்சனங்கள் குறித்தும் நேரடியாகவே கேட்டு தெரிந்து கொண்டார்.

Also Read | "ஒரு பெரிய மன்னிப்பு கேட்டுக்குறேன்".. விக்ரமனிடம் அமுதவாணன்.. காரணம் என்ன தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi and vikraman emotional speech about their bond

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalakshmi, Vikraman will find this news story useful.