"உன் திமிர என்கிட்ட காட்டாத".. COOKING நேரத்தில் மாறி மாறி மோதிக்கிட்ட ஜனனி, தனா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ஜனனி - விக்ரமன் வழக்கில் அசீமின் பரபர வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், இந்த வாராம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது குற்றங்களை வழக்காக முன் வைக்க, அதனை நீதிமன்றம் மூலம் வாதாடி, அந்த வழக்கில் தீர்ப்பை எட்ட வேண்டும். அந்த வகையில், ADK - அசீம் விவகாரம், விக்ரமன் - அமுதவாணன் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள், போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டும் வருகிறது.

முன்பு நடந்த சண்டைகளை வைத்து சில வழக்குகள் நடைபெறுவதால் வாதாடும் சமயத்தில் தீப்பறக்கவும் செய்கிறது. இந்த நீதிமன்ற டாஸ்க்கிற்கு மத்தியில், திடீரென ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் கோபத்தில் வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட நிகழ்வும் அதிக கவனம் பெற்று வருகிறது.

ஷிவின், அமுதவாணன் உள்ளிட்டோர் சமையல் செய்து கொண்டிருக்க, அவர்களை சுற்றி குயின்சி, தனலட்சுமி, ரச்சிதா, ஜனனி உள்ளிட்டோர் நிற்கின்றனர். அந்த சமயத்தில் உணவு தயார் செய்து தருவது தொடர்பாக தனலட்சுமி பேச, குறுக்கே ஜனனியும் கருத்தை தெரிவிக்கிறார்.

உடனடியாக பேசும் தனலட்சுமி, "நீ சும்மா சண்டைக்கு வந்துட்டே இருக்காதே" என எரிச்சலுடன் கூற, இதற்கு பதில் சொல்லும் ஜனனி, "தனலட்சுமி யாரு சண்டைக்கு வந்தது?. எல்லாத்துக்கும் கத்தாத சரியா?" என கூறுகிறார். "நீதான் எல்லார்கிட்டயும் கத்திக்கிட்டு இருக்க. நான் கத்தல. என்கிட்ட கத்தாத அந்த மாதிரி" என தனலட்சுமி திருப்பி ஆவேசமாக பேசுகிறார்.

தனலட்சுமி வார்த்தையால் இன்னும் கோபமடைந்த ஜனனி, "நீ உன் திமிர என்கிட்ட காட்டாத சரியா" என தெரிவிக்க, "என்கிட்ட எல்லாம் திமிர் இல்ல, என்கிட்ட திமிர் இருந்தத நீ பாத்தியா?" என்ன பதில் கேள்வி கேட்டு கோபம் அடைகிறார் தனலட்சுமி. "என்கிட்ட கத்தாதே" என ஜனனி சொன்னதும் நீ போ என்கிறார் தனலட்சுமி. "நீ சொல்றதுக்கு நான் ஏன் போகணும்?" என ஜனனி மீண்டும் கோபம் கொள்ள, இதன் பின்னர் ஷிவின் இருவரையும் அமைதியாக இருக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

அதே போல, சமையல் வேலை முடிப்பது வரையும் அனைவரும் அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்கிறார் ஷிவின். சமையல் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தனலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் மாறி மாறி வார்த்தைகளை விட்ட சம்பவம் கடும் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. வெளியே போய்டணும்".. திரும்பவும் புலம்பிய தனலட்சுமி..!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi and janani fight in biggboss house

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Janani, Vijay Television, Vijay tv will find this news story useful.