"ஆடும்போது மேல கை போட்டுட்டாரு".. "NIGHT HOTEL ROOM கதவ தட்னாங்க" - நடனக் கலைஞர் பிரியங்கா பேட்டி.. VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மாடல், டான்ஸர், இன்ஸ்டாகிராம் புகழ் பிரியங்கா நாயர் பல்வேறு இடங்களில் நடனமாடி புகழ் பெற்றவர்.

நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் பிரபுதேவா உட்பட பலருடன் பணியாற்றி இருக்கும் பிரியங்கா, தான் வெளியில் ஷோக்களில் நடனம் ஆட சென்றபோது தமக்கு நடந்த சில வலிமிகுந்த அனுபவங்களை பிரத்தியேகமாக பகிர்ந்திருக்கிறார்.

இதுபற்றி பிரியங்கா குறிப்பிடும்போது, பெண் நடனக் கலைஞர்களை அழைத்து இடுப்பை வளைத்து ஆடு எனச் சொல்வது; ஆடும்போது இவங்களுக்கு பத்துரூபாய் போடலாம் என்று சொல்லி அந்த நடன கலைஞர்களின் காதில் விழுமாறு பேசுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இதேபோல் நடனமாடும் போது ஒருவர், தன் மீதே கை போட்டு விட்டதாகவும் குறிப்பிடும் பிரியங்கா அந்த நேரத்தில் தன்னால் ரியாக்ட் பண்ண முடியாது என்பதால் ஷோ முடிந்துவிட்டு அதுபற்றிய குற்றச்சாட்டை முறையான நபரிடம் முன் வைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: ஜோதிகாவின் social media எண்ட்ரி.. “என் பொண்டாட்டி.. Strongest”.. சூர்யாவின் தெறிக்கவிடும் வாழ்த்து!

அதேசமயம் தன்னுடன் நடனமாடும் ஆண்களுடன் சென்று நடனமாடும் நிகழ்ச்சிகளுக்காக தங்கும்போது, அந்த இடங்களில் ரூம் கதவை வந்து தட்டினார்கள் என்று குறிப்பிடும் பிரியங்கா, ஒரு பெண் தனியாக இருந்தால் நிச்சயம் அவர்களிடம் கஷ்டம் தான் என்று குறிப்பிடுகிறார். 

மேலும் சிலர், தன்னை பார்த்தாலே ‘டெரராக இருப்பதாக’ பயந்து தனக்கு அருகிலேயே வரமாட்டார்கள் என்று சிரிக்கும் பிரியங்கா, தனக்கு ஆண்களை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றும், அவர்களிடம் என்ன சொல்லி தவிர்க்க வேண்டும் என்பதும் தெரியும் என்றும், ஆனால் நிறைய பெண்களால் இதை ஹேண்டில் செய்வதற்கு முடியாது அல்லது தெரியாது என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் பேசியவர், “தளபதி விஜய் நடித்த திரைப்படத்தில் வரும் ஊதா ஊதா ஊதா பூ பாடலுக்கு நடனம் ஆடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தேன். அது பற்றி நிறைய பேர் கமெண்ட் செய்ததுடன், எதற்காக இந்த மாதிரி ஆடைகளை அணிகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

Also Read: அடக்கடவுளே!! அதிர்ச்சியில் திரையுலகம்.. தந்தையை இழந்து பெரும் சோகத்தில் இளம் ஹீரோயின்!

உண்மையில் அவர்கள் எல்லாம் ஆபாசப் படங்கள் பார்ப்பதே இல்லை என்பதுபோல் பேசுகிறார்கள். அதைப் பற்றி உங்களுக்கு என்ன? என்று திரும்பவும் அவர்களுக்கு பதில் கொடுத்தேன்.

இதேபோல் ட்ரீமம் வேக்கமம் பாடலுக்கு நடனம் ஆடியபோது, சில பெண்களே வந்து கடிந்து கொண்டார்கள். ஆனால் அந்த பாடலுக்கு ராணி முகர்ஜி அவ்வாறு டான்ஸ் ஆடும் போது யாரும் எதுவும் சொல்லவில்லை ஏன்? என்பது கேள்வியாக இருந்தது. உண்மையில் நான் ஒரு டான்ஸர், என்னைப் பொறுத்தவரை அது ஒரு பாடல். அந்த பாடலுக்கு எப்படி நடனம் ஆட வேண்டுமோ அப்படி ஆடினேன் அவ்வளவுதான்.

அதேசமயம் சில பெண்கள் இந்த வீடியோக்கள் வைரலாகும் போது இந்த வீடியோக்கள் தங்களுக்கு ஒரு மன உறுதியை கொடுப்பதாக மெசேஜ் செய்தனர். பலருக்கும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டமைப்பு உள்ளது. அதில் இருந்தவர்கள் மீறி அவர்கள் வளர்வது என்னை போல டான்ஸ் ஆடும் ஆண் நண்பர்கள் சிலர் உட்பட பலருக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் இதில் இருக்கும் நிதர்சனம்.” என பேசியுள்ளார்.

தன்னுடைய இந்த நடனத்தின் மீதான விருப்பத்தினால், தன் காதல் பிரேக் அப் ஆன கதைகளையும் பிரியங்கா கூறியுள்ளார். அதில், “பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒருவனை ஐந்து வருடமாக காதலித்தேன். அந்த விஷயம் வீட்டில் தெரிந்து அப்பாவிடம் அடி வாங்கினேன். அப்போது பல்லெல்லாம் கூட உடைந்தது. இப்போது இருப்பது செராமிக் தான். ஆனால் அவன் எந்த காரணமும் இல்லாமல் என்னை விட்டுப் போய்விட்டான்.

நான் டான்ஸ் பண்ணுவதும் அவனுக்கு பிடிக்காது, விளையாட்டில் ஈடுபடுவதும் அவனுக்கு பிடிக்காது. ஆனால் அவனுக்கு பிடிக்காது என்பதால் சில நாட்கள் டான்ஸ் பண்ணாமல் இருந்தேன். தாமதமாகத்தான் உணர்ந்தேன் காதலுக்கும் தியாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. இப்போது யார் வந்தாலும் நான் இப்படித்தான் என்பதைச் சொல்லி விடுவேன்.

அதன் பிறகும் இன்னொரு பையன் என்னை காதலித்தான். பின்னர் ஷோ பண்ணும்போது ஆண் நடன கலைஞர்களுடன் இணைந்து ஆடியதால், அவனுக்கு பிடிக்கவில்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்கவில்லை. அப்படியானால்  வாழ்க்கையில் தனக்கு பிடித்த எதுவுமே பண்ண முடியாதா என்கிற சூழலில் இப்படி பல பெண்கள் இருக்கின்றனர்.

அவர்களால் நிறைய சாதிக்க முடியும். ஆனால் அவர்கள் அவற்றை எல்லாம் யார் யாருக்காகவோ தியாகம் செய்து எல்லாவற்றையும் இழந்து தாமதமாகவே அதை உணர்கிறார்கள்.” என கூறுகிறார். பிரியங்கா நாயர் பகிர்ந்திருக்கும் பல்வேறு விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.

"ஆடும்போது மேல கை போட்டுட்டாரு".. "NIGHT HOTEL ROOM கதவ தட்னாங்க" - நடனக் கலைஞர் பிரியங்கா பேட்டி.. VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dancer Priyanka Nair painful story interview video பிரியங்கா

People looking for online information on InstagramReels, Instareels, PriyankaNair, Video will find this news story useful.