கண்ணான கண்ணே… பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பளித்த இமான்! -விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமான இளைஞர் ஒருவருக்கு இசையமைப்பாளர் இமான் பாட்டுப்பாட வாய்ப்பு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற இளைஞர் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இந்நிலையில் அவர் தனது இனிமையான குரலால் கண்ணானே கண்ணே பாடலை பாடினார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கவனித்த இசையமைப்பாளர் டி இமான், இந்த இளைஞரின் போன் நம்பரை கேட்டு தனது டிவிட்டர் பக்ககத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தொடர்பை பகிர்ந்தமைக்கு அனைவருக்கும் நன்றி. அந்த நபரிடம் பேசிவிட்டேன். விரைவில் அவருக்கு ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுப்போம். கடவுள் அவருடன் இருக்கட்டும் அவருக்கு ஆறுதலை கொடுக்கட்டும். திருமூர்த்திக்கு மகிழ்ச்சியான நாட்கள் உள்ளன.. கடவுளை புகழுங்கள்.. என பதிவிட்டிருக்கிறார்.

Tags : D Imman

D Imman offers blind Thirumurthy an offer to sing soon

People looking for online information on D Imman will find this news story useful.