"கண்கள் கண்ணீரில் .. அதுதான் கடைசினு இருவருக்குமே தெரியாது!" - சோகத்தில் டி.இமான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறை பிரபலங்கள் மட்டுமல்லாது திரைத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் அபிமான பிரபலங்களின் நெருங்கிய உறவுகளும் அடுத்தடுத்து மரணம் அடைவதை தொடர்ச்சியாக காண நேரிடுகிறது.

அண்மையில் இயக்குநர் கங்கை அமரனின் துணைவியார், ஷங்கரின் தாயார், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி என பலரது மரண சம்பவங்கள் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் காலமான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ட்வீட்டை பதிவிட்டுள்ள டி.இமான், “இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன், வெளிப்படையாக எங்கள் இருவருக்குமே தெரியாது, என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக அது இருக்கும் என்று!

அவர் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு விரைவில் திரும்பி வருவார் என்று எனக்கு பலமான நம்பிக்கை இருந்தது, ஆனால் மே 25-ஆம் தேதி(இன்று) சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நான் உங்களை இழந்த இந்த நாள் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்கள் ஒரே குழந்தை!” என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: “மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் அவசர கடிதம்!”.. வலுக்கும் தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சை!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

D Imman heartbreaking statement after his mother passes away

People looking for online information on D Imman, D.Imman will find this news story useful.