பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மறைவு - ஐபிஎலின் போது நடைபெற்ற சோகம் - இரங்கல் தெரிவித்த CSK

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தாமதமாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் குறித்த கருத்துக்களாலும் மீம்ஸ்களாலும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன.

இந்நிலையில் ரசிகர்களை திடீரென சோகத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கமென்ட்ரி டீமில் இடம் பெற்றிருந்த அவர் ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார்.

ஹோட்டல் அறையில் அவர் இருக்கும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்க வயது 59. அவரது  மறைவு உலக அளவில் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''டீன் ஜோன்ஸின் மறைவு செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தோம். கிரிக்கெட்டிற்கு பெரும் இழப்பு. சேப்பாக்கத்துடன் அவருக்கு இருக்கும் தொடர்பு  எப்பொழுதும் நினைவில் கொள்ளப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்'' என்று குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CSK pays condolence for Popular cricketer's sudden demise ft Dean Jones | பிரபல கிரிக்கெட் வீரரின் திடீர் மறைவுக்கு சிஎஸ்கே இரங்கல்

People looking for online information on Chennai Super Kings, CSK, Dean Jones, IPL will find this news story useful.