BIGGBOSS-ல கடைசி வரைக்குமே இது மட்டும் எனக்கு நடக்காமலே போயிடுச்சு... மனம் திறந்த நிரூப்! EXCLUSIVE INTERVIEW

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஐந்தாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராஜூ வெற்றி பெற்றார்.

Advertising
>
Advertising

பிக்பாஸ் 5வது சீசன்:

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களாக நடந்து கொண்டிருந்தது. இதன் நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து ஐந்தாவது சீசன் மீண்டும் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப் பட்டு வந்தது.

Also Read: ஹீரோயின்கள், மாடல்னு 12 பேரு.. நடிகர் நகுல், BiggBoss முகேன் பங்கேற்கும் புதுமையான ரியாலிட்டி ஷோ!  லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

நிரூப் நந்தகுமார்:

இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக பங்கேற்றிருந்தார் நிரூப். இவர் அண்மையில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வரை பிக்பாஸ்  வீட்டுக்குள் நீடித்து விளையாண்டுவந்தார்.  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிரூப், ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் மிகவும் ஆக்டிவாக விளையாட்டு வந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து கேம்களிலும் ஸ்டாராக திகழ்ந்தார்.

நிரூப் பிரத்தியேக பேட்டி

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நிரூப், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்திற்கு  பல்வேறு தகவல்களை சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார். அதில், “இமான் அண்ணாச்சி நீங்கள் பயந்துவிட்டதாக குறிப்பிட்டபோது எமோஷன் ஆகிவிட்டீர்களே?” என கேட்கப்பட்டது.

Also Read: வெடிய போடுங்க ஜி! பாட்டு, படம், டான்ஸூ, காமெடி, சீரியலை அடுத்து..  இப்ப விஜய் டிவில இதுவும் வருது!

கடைசி வரை இது நடக்காம போயிடுச்சு

இதற்கு பதில் அளித்த நிரூப், “அப்படியல்ல. நான் பயம் கொண்டேன் என்றால், ஒவ்வொரு வாரமும் நான் பயந்தது ஒன்றே ஒன்றுக்கு தான். அந்த ஒரு குறிப்பிட்ட வாரம் நான் என்ன செய்தேன்? எதனால் மக்களுக்கு என்னை பிடிக்காமல் போய்விடும் என யோசித்தேன், காயின் என்னிடம் இருந்தாலும், கேம் விளையாடி அதன் மூலம் டாஸ்கில் வென்று கேப்டன் ஆகவே நினைத்தேன்.

கேம்ல எதுக்கு எமோஷன்?

ஆனால் அது முடியாததால் அண்ணாச்சி நான் பயந்து நாணயத்தை பயன்படுத்திவிட்டதாக கூறினர்.  உண்மையில் பாட்டி இறந்தபோது கூட அழாத நான், அண்ணாச்சி வெளியே சென்றபோது அழுதேன். எனினும் கேம் என்று வரும்போது நான் எதுக்கு எமோஷனை பார்க்க வேண்டும்.? என்று எனக்கு தோன்றியது. அவ்வளவுதான்!” என்று தெரிவித்துள்ளார்.

BIGGBOSS-ல கடைசி வரைக்குமே இது மட்டும் எனக்கு நடக்காமலே போயிடுச்சு... மனம் திறந்த நிரூப்! EXCLUSIVE INTERVIEW வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Couldnt make this till bigg boss ends Niroop Exclusive Interview

People looking for online information on Bigg Boss 5 Tamil, Bigg Boss Niroop, Bigg Boss Niroop Nandakumar, Bigg Boss Tamil 5, Niroop Exclusive Interview will find this news story useful.