"நான் செத்துட்டேனு நெனச்சுட்டாங்க".. பிரபல நகைச்சுவை நடிகையின் சோகமான மறுபக்கம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் அதிகம் பிரபலமாக இருப்பது போல சில காமெடி நடிகைகளும் மக்கள் மத்தியில் அதிகம் பெயர் எடுத்துள்ளனர். அந்த வகையில் மிக முக்கியம் ஆனவர்களில் ஒருவர் நடிகை சுமதி.

Advertising
>
Advertising

இவர் தோன்றும் திரைப்படங்களில் மிகவும் ஆக்ரோஷமாக அதே வேளையில் காமெடி கலந்து இருக்கும் ரோல்களில் நிறைய நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவை. ஐயா, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் சுமதி நடித்த காமெடி காட்சிகள் நினைக்கும் போதே சிரிப்பை வர வைக்கக் கூடியவை.

இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் நடிகை சுமதி தற்போது அளித்துள்ளார். சினிமா மூலம் பலரையும் சுமதி சிரிக்க வைத்தாலும் அவரது குடும்ப பின்னணி அதிக வேதனைகள் நிறைந்து இருந்தது இந்த பேட்டி மூலம் தெரிய வருகிறது.

நடிகை சுமதியின் உருக்கமான பின்னணி

நடிகை சுமதி திரைப்படங்களில் அதிக பிரபலமாக இருந்தாலும் அவருடைய பர்சனல் பக்கங்கள் நிறைய வேதனையுடன் இருந்துள்ளது. தனது மிகவும் சோகம் கலந்த அந்த பர்சனல் வாழ்க்கை குறித்து பேசிய நடிகை சுமதி, "எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கேன். கஷ்டப்பட்ட அளவுக்கு தான் இன்னைக்கு நான் இங்க வந்து நிற்குறேன். முன்னாடி எனக்கு ஒரு திருமணம் ஆச்சு. அவர் வந்து வேலைக்கு போகாதேன்னு சொல்லிட்டு, குடிச்சிட்டு ரொம்ப சந்தேகப்பட்டுட்டு இப்படி எல்லாம் இருக்கவும் பெத்தவங்க கிட்ட போய் நான் சொன்னேன். ஆனால் அவங்களும் அதை ஏத்துக்கல.

சரி இப்படியே இருந்தா நம்ம வாழ்க்கை எப்படி. நம்ம பெண்களுக்குன்னு ஒரு தைரியம் இருக்குல்ல. அப்புறம் யோசனை பண்ணி பாத்துட்டு நான் அவருகிட்ட நான் போய் சொன்னேன், சரி வா லாபமோ, நஷ்டமோ  பொழச்சி காமிப்போம்ன்னு வந்தோம். இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்கோம்ன்னு சொல்ல முடியாது, நல்லா இல்லன்னு சொல்ல முடியாது.

செத்து போய்ட்டேன்னு நெனச்சுட்டாங்க

ஆனா என் பசங்கள விட்டு நான் பத்து வருஷம் பிரிந்து இருந்தேன் (கண் கலங்கியபடி). ஆனா இப்ப எல்லாருமே நல்லா பேசுறாங்க, வருவாங்க, போவாங்க. பெத்தவங்க, கூடப் பிறந்தவங்க எல்லாருமே நல்லா பேசுறாங்க. நான் வீட்ட விட்டு வரும்போது எங்க அப்பா இருந்தாரு, நான் திரும்பி போகும் போது எங்க அப்பா வீட்டுல இல்ல, இறந்துட்டாரு.

ஆனா எங்க அப்பா சாகறதுக்கு முன்னாடியே என்னை டிவியில் எல்லாம் பார்த்து இருக்காரு. அப்ப டிவி சீரியல் எல்லாம் நிறைய போவேன். அப்புறமா எங்க அம்மாகிட்ட நம்ம பொண்ணு சாகல, சினிமாவுல இருக்கா அப்படின்னு சொன்னாங்க. நான் இறந்துட்டேன்னு எல்லாரும் நினைச்சுட்டாங்க. எங்க அப்பாக்கு ஒரு மனசுல நான் எங்கேயோ உயிரோட இருக்கேன் அப்படின்றதுதான் இருந்துச்சு" என தெரிவித்தார்.

"நான் செத்துட்டேனு நெனச்சுட்டாங்க".. பிரபல நகைச்சுவை நடிகையின் சோகமான மறுபக்கம்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Comedy Actress Sumathi about her painful life exclusive

People looking for online information on Exclusive, Sumathi will find this news story useful.