ஆரி செஞ்சது தப்பு... 'அவங்க' செஞ்சது மட்டும் சரியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரி மற்றும் ரம்யா பாண்டியன் இருவருக்கும் முட்டல், மோதல்கள் இருந்து கொண்டே வருகின்றன. ஆரம்பத்தில் இருந்து ஆரி ஏதாவது பிரச்சினையில் சிக்கினால் அவருக்கு எதிராக பேசுவதை ரம்யா வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். பாலாஜி-ஆரி இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் போது இதை பலமுறை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் தான் அனிதா, அர்ச்சனா, ரம்யா மூவரும் சேர்ந்து ஆரியிடம் சண்டை போட்டுள்ளனர். இதைப்பார்த்த ஆரி ரசிகர்கள் அவருக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா? என கொந்தளிக்க, பதிலுக்கு ரம்யா ரசிகர்களோ எங்க தலைவி எவ்ளோ தெளிவா பாயிண்ட் புடிச்சு பேசுறாங்க என அவரை பாராட்டி வருகின்றனர். இதனால் இரண்டு ஆர்மிக்காரகளுக்கும் இடையே சமூக வலைதளங்களில் பெரும் பஞ்சாயத்து ஓடுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Clash Between Aari and Ramya fans in Social Media

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.