''கங்கனா ரனாவத்தால்., படத்தை விட்டு வெளியேறினேன்..'' - தமிழ் சினிமா பிரபலம் அதிர்ச்சி தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கங்கனா ரனாவத் நடிப்பதால், படத்தை விட்டே வெளியேறினேன் என தமிழ் சினிமா பிரபலம் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். 

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். இதை தொடர்ந்து இவர் ஹிந்தியில் முன்னணி ஹீரோயினாக கலக்கி தொடங்கினார். இதனிடையே அண்மையில் நடிகர் சுஷாந்தின் மறைவுக்கு பிறகு, இவர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் குறித்து, ஒரு அதிர்ச்சி தகவலை ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ''கங்கனா ரனாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதால், ஒரு படத்தை நான் தவிர்க்க வேண்டிய நிலை வந்தது. எனக்கு அது அசௌகர்யமாக இருந்தது. நான் இதை தயாரிப்பாளரின் தரப்பில் சொன்ன போது, அவர்களும் புரிந்து கொண்டார்கள். சில சமயங்களில், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ.., அதுவே சரி.'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

கங்கனா பற்றி பி.சி.ஶ்ரீராம் அதிர்ச்சி தகவல் | Cinematographer PC Sreeram shocking statement on kangana ranaut

People looking for online information on Kangana Ranaut, PC Sreeram will find this news story useful.