VIDEO: பட்டியல் சமூக மக்களை அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீரா மிதுனுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. தனது சமீபத்திய வீடியோவில் மீரா மிதுன் குறிப்பிட்ட பட்டியல் சமூகத்தை பற்றி அவதூறாக பேசியும் அந்த சமூகத்தை சார்ந்த தமிழ் சினிமா இயக்குனர்களை தரக்குறைவாக பேசியும் சர்ச்சைக்குள்ளானார்.

இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நிர்வாகி வன்னியரசு சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார்.

அப்புகாரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் தங்கி இருந்த அவரை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மாடலிங்கில் இருந்த நடிகை மீரா மிதுன், 8 தோட்டாக்கள், என்னை அறிந்தால், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEO: பட்டியல் சமூக மக்களை அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cinema actress model meera mithun was arrested

People looking for online information on Meera Mitun, Thaanaa Serndha Koottam will find this news story useful.