தஞ்சைக்கு அழைத்த ”ஆதித்த கரிகாலன்” விக்ரம்... "வந்தியத்தேவன்" கார்த்தியின் வைரல் REQUEST.‌!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | PONNIYIN SELVAN: கார்த்தி - த்ரிஷா - ஷோபிதா தோன்றும் "ராட்சஸ மாமனே".. புதிய காட்சிகளுடன் வெளியான LYRICAL VIDEO!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படங்கள் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விரைவில் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மத்தியில், நடிகர் விக்ரம் ட்விட்டரில் தனது பெயரை ஆதித்த கரிகாலன் என்றும், நடிகை த்ரிஷா குந்தவை என்றும் மாற்றி உள்ளனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்புபடுத்தி விக்ரம் போட்ட ட்வீட்டும், அதற்கு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி கொடுத்த ரிப்ளையும் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

விக்ரம் தனது ட்வீட்டில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா" என குறிப்பிட்டு கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோரை டேக் செய்துள்ளார்.

 

இதற்கு கார்த்தி அளித்த பதிலும், அவர் பதிவிட்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மரம் ஒன்றில் சாய்ந்து கண் அசந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கார்த்தி, "இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me" என ஜாலியாக பதில் தெரிவித்துள்ளார்.

Also Read | "என் அப்பா மாதிரி யாருக்கும்".. நிகழ்ச்சியில் Emotional ஆன Viral சிறுமி.. Exclusive!!

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan vikram tweet about ps1 karthi responds

People looking for online information on Chiyaan Vikram, Karthi, Ponniyin Selvan part 1, Trisha Krishnan, Vikram will find this news story useful.