சித்ரா மரணத்தில் ஹேம்நாத் பேசிய ஆடியோ.?? அன்று இரவு நடந்த விஷயம்.. வைரல் ஆகி பரபரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் தனது நண்பருடன் பேசிய ஆடியோ லீக் ஆனது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மரணம் தொடர்பாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது ஹேம்நாத் அவரது நண்பரிடம் சித்ராவின் மரணம் தொடர்பாக பேசிய ஆடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் இரவு ஷோ முடிந்து ஹோட்டல் ரூமுக்கு வந்த பிறகு, சிகரெட் புகைக்க வெளியில் வந்ததாகவும், அந்த நேரத்தில் சித்ரா ரூம் கதவை சாத்தி கொண்டதாகவும் கூறுகிறார்.

மேலும் அவர் வெளியில் நின்று சித்ராவை கதவை திறக்க சொல்லியுள்ளார். பிறகு அவர் உள்ளே சென்ற போது, சித்ரா தூக்கில் தொங்கியிருந்ததாக அவர் நண்பரிடம் பேசுகிறார்.

இது உண்மையிலேயே ஹேம்நாத் குரலா..? அவர்தான் தன் நண்பரிடம் பேசினாரா என முழு விசாரணை நடந்து வரும் சூழலில், இந்த ஆடியோ இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சித்ரா மரணத்தில் ஹேம்நாத் பேசிய ஆடியோ.?? அன்று இரவு நடந்த விஷயம்.. வைரல் ஆகி பரபரப்பு வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சித்ரா மரணத்தில் திடீர் பரபரப்பு | Chithra's husband hemnath phone call audio with friend leaked

People looking for online information on Chithra, Hemnath will find this news story useful.