சித்ரா மரணத்தில் கணவரின் ஆடியோ.. ''போலீஸ்கிட்ட என்ன சொல்லனும்..'' - நண்பரின் பகீர் ஆதாரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சித்ரா மரணத்தில் அவரது கணவர் ஹேம்நாத், நண்பர் ரோகித்திடம் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து, அவரது கணவர் ஹேம்நாத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே சித்ராவின் கணவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது நண்பரான ரோகித் என்பவர், ஜாமீக் கொடுக்க கூடாது என எதிர் தரப்பில் மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் ரோகித்துடன் சித்ராவின் மரணம் குறித்து பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆடியோவில், ''சித்ராவின் மரணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதற்கு காரணம் சித்ராவின் தாயார் கொடுத்த அழுத்தம்தான்'' என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் சித்ராவின் வழக்கு குறித்து விசாரித்தால், போலீஸிடம் என்ன சொல்ல வேண்டும் என்றும் ஹேம்நாத் ரோகித்துக்கு அறிவுரைகள் வழங்குகிறார். அன்று இரவு ஹோட்டல் அறையில் என்ன நடந்தது, சித்ராவின் தலையில் ஏற்பட்ட காயம் எதனால் இருக்கக்கூடும் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஹேம்நாத் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சித்ரா மரணத்தில் கணவரின் ஆடியோ.. ''போலீஸ்கிட்ட என்ன சொல்லனும்..'' - நண்பரின் பகீர் ஆதாரம் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சித்ரா மரணத்தில் பரபரப்பு ஆடியோ | Chithra's husband hemnath call recording with his friend rohit is released

People looking for online information on Chithra, Hemnath, Pandian Stores Chithra, Rohit will find this news story useful.