இன்றைய மேட்ச்சில் SPB-க்காக, CSK அணி என்ன செய்ய போகிறார்கள் தெரியுமா?.. நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார்.  தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளனர். அதாவது இன்றைய தினம் நடக்கவிருக்கும் மேட்ச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் தங்கள் கைகளில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாட இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு மறைந்த கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மற்றும் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அணி சார்பாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Check what csk team going to do for spb SPB-க்காக, CSK செய்யம் மரியாதை

People looking for online information on CSK, IPL, SP Balasubramaniam, SPB will find this news story useful.