“BIGG BOSS மூலம் ஸ்டார் ஆக முடியாது".. "அழுகாட்சி ஹீரோயினாவே நடிக்க வெச்சுட்டாங்க” - ரேகா பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil: நடிகை ரேகா பிக் பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது என்று நடிகை ரேகா ஒரு விழாவில் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

அரங்கேற்ற விழா

திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார்.

Also Read: "பிக்பாஸ் என்ன இது? ஒடைச்சிருவேன் வீட்டையே".. உச்சகட்ட கோவத்தில் கொந்தளித்த வனிதா அனல் தெறிக்கும் BBUltimate

ரசித்துப் பார்த்தேன்..

அப்போது அவர் பேசும்போது, "நான் பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். முழு நிகழ்ச்சியும் ஒரு நிமிடம் கூட கவனம் சிதறாமல் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது இந்த ஆதிராவின் நடன நிகழ்ச்சியைத் தான். அவள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை புன்னகை புரிந்து கொண்டே இந்த நடனத்தை ஆடினாள். கொஞ்சம் கூட அவளது ஆற்றலின் அளவு குறையவில்லை. நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.” என்று பேசினார்.

அழுகை நாயகியாகவே நடிக்க வைத்து விட்டார்கள்

மேலும் தன்னை பற்றி பேசிய ரேகா, “நானும் கே.ஜே.சரசம்மாவிடம் நடனம் கற்றுக்கொள்ளப் போனேன். மூன்று நான்கு மாதங்கள் தான் போயிருப்பேன். அலாரிப்பு வரை போனேன். அதன்பிறகு அரைமண்டியில் உட்கார் என்றார்கள். எங்கே அரைமண்டியில் உட்கார்வது? அதற்குமேல் படங்களில் பிசியாகி விட்டேன். படங்களில் கிளிசரினைக் கொடுத்து அழுகை கதாநாயகியாகவே தொடர்ந்து நடிக்க  வைத்து விட்டார்கள்.

நான் படங்கள் தொடர்ந்து நடித்ததால் அலாரிப்புடன் என் நடனப் பயிற்சி  முடிந்தது. நடனத்தைத் தொடர முடியவில்லை. நமக்குத் தட்டிக் கொடுக்கவும் ஊக்கப்படுத்தவும்  யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது

தொடர்ந்து பிக்பாஸ் பற்றி பேசியவர், “பிக்பாஸ் மூலம் ஒரு நூறு நாட்கள்தான் பிரபலமாக இருக்கமுடியும். பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த நிலையில் யாரும் பொறுமையாக இருந்து காண்பிக்க வேண்டும். நான் 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன். என் மீது நிறைய பேருக்குப் பொறாமை இருந்தது. எல்லாம் சாதித்துவிட்டு வந்திருக்கிறார் என்று.

பொறாமை எண்ணங்களோ கர்வமோ இருக்கக் கூடாது.

நான் சொல்வேன் சாதித்த பிறகுதான் மிகவும் அர்ப்பணிப்புடன் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. நான் நடித்த படங்களில் எல்லாம் படப்பிடிப்புகளுக்குச் சரியான நேரத்தில் சென்று பொறுமையாக இருந்ததால்தான் இதை என்னால் செய்ய முடிந்தது. ஆனால் பொறாமை எண்ணங்களோ கர்வமோ இருக்கக் கூடாது.

'நான் இவ்வளவு பெரிய ஆள், நான் ஏன் 17 பேருக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும்?' என்றெல்லாம் நினைக்கக்கூடாது. அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்த்தேன்.” என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, “ஆதிராவின் பெற்றோர்கள் அவளை  நன்றாக ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள். பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளைகளிடம் தாங்கள் இஷ்டப்பட்டதைத் திணிக்கக்கூடாது.  பிள்ளைகளிடம் தானாகக் கற்றுக்கொள்ள விருப்பம்  வரவேண்டும்” என்று கூறி மீண்டும் வாழ்த்தினார்.

Also Read: "பிஞ்சிரும் ஜூலி .. என் செண்ட் பாட்டில Toilet-ல போடுற?".. "தூக்கி அடிச்சிருவேன்" - வனிதா

தொடர்புடைய இணைப்புகள்

Cant become a star from Bigg Boss Says Rekha பிக்பாஸ்

People looking for online information on Bigg Boss OTT, Bigg Boss Rekha, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil will find this news story useful.