அதிர்ச்சி மரணம்!! 'பிரெய்ன் டெட்' என அறிவிக்கப்பட்ட நடிகருக்கு விபத்தில் பெரும் சோகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்க்கு மூளை  இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சஞ்சாரி விஜய், ஜூன் 12 அன்று (சனிக்கிழமை) பெங்களூரில் சாலை விபத்துக்குள்ளானார். 

இந்த விபத்து நடந்த ஒரு நாளுக்குப் பிறகு நடிகர் சஞ்சாரிக்கு பிரெய்ன் டெட் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சாரி விஜய் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​இருவரும் சவாரி செய்த அந்த பைக் சறுக்கி விழுந்து மின் கம்பத்தில் மோதியது. இதனை அடுத்து நடிகர் சஞ்சாரி விஜய் கடுமையான காயங்களுக்கு ஆளானார். தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் கிரிட்டிகலான ஸ்டேஜை அவர் அடைந்ததை அடுத்து இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திரு. விஜய் நியூரோ ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் நிலையாக உள்ளது. நரம்பியல் ரீதியாக அவர் ஆழ்ந்த மயக்கத்தில் உள்ளார் மற்றும் மூளை செயலிழப்பு அறிகுறிகள் அவருக்கு காட்டுகின்றன. தற்போதைய மீளமுடியாத மூளை சேதத்தை கருத்தில் கொண்டு அவரது குடும்பம் முன் வந்து உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. உறுப்பு தான நெறிமுறையின்படி வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம். இந்த நேரத்தில், திரு விஜய் ஆபத்தான நிலையில் உள்ளார், நாங்கள் அனைத்து ஆதரவையும் அளிப்போம். " என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் தான் நடிகர் சஞ்சாரி விஜய் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நானு அவநல்லா எனும் திரைப்படத்தில் ஒரு திருநங்கையாக சஞ்சாரி விஜயின் நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததும், லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை வழங்கி வந்தார் நடிகர் சஞ்சாரி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அசின் மகளா இது? நல்லா வளந்துட்டாங்களே! என்ன கத்துக்கிறார் பாருங்க.. வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Brain dead declared actor Sanchari Vijay met accident RIP

People looking for online information on RIP, RIPSanchariVijay, Sanchari Vijay will find this news story useful.