சாலையோர பாட்டிக்காக சிறுவன் செய்த நெகிழ்ச்சி காரியம்! எமோஷனல் ஆன விக்னேஷ் சிவன்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகின்றது.

Advertising
>
Advertising

 

தமிழ்த் திரையுலகில் கடந்த 2012ஆம் ஆண்டு "போடா போடி" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் சிலம்பரசன், வரலக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து, தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் நடிப்பில், "நானும் ரவுடி தான்" என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.


அதன் பிறகு, 2017ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் போல பலரும் நடித்திருந்தனர். அவ்வப்போது பல படங்களுக்கு பாடல்களும் எழுதி வந்துள்ளார். இவர் எழுதிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். இவர் சில ஆல்பம் பாடல்களையும் எழுதியுள்ளார். அதில் "எனக்கென யாரும் இல்லையே" மற்றும் "சான்சே இல்லை" என்ற பாடல் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.


விக்னேஷ் சிவன் தற்போது வலிமை படத்தில் "நாங்க வேற மாரி" மற்றும் "நான் பார்த்த முதல் முகம் நீ" என்ற அம்மா பாடலையும் எழுதினார். இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்று பாராட்டுக்களையும் குவிக்கின்றது. மேலும் தற்போது "காத்துவாக்குல ரெண்டு காதல்" என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இவர் வெகு சில படங்களே இயக்கினாலும், தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முன்னணி இயக்குனராக இருக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது சமூகவலைதளபக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் சாலையோரத்தில் ஒரு பாட்டி காய்கறிகள் விற்று வருகிறார். அப்போது சாப்பிடுவதற்காக தனது உணவு பாத்திரத்தை எடுத்து நடக்க முடியாமல் வரும்பொழுது அது கை நழுவி கீழே விழுகிறது, உடனே பதறிப்போன பாட்டி சிறிது நேரம் மிகவும் வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்தார். சாலையோரத்தில் நடந்து செல்பவர்களும் அதைப்பார்த்து கண்டுகொள்ளாமலே சென்று கொண்டிருந்தனர். பின்னர், இதனை அறிந்த ஒரு சிறுவன் அந்த பாட்டியை நோக்கி சாலையை கடந்து கவலைப்படாதீங்க பாட்டி என கூறி தனக்கு வைத்திருந்த மதிய உணவை அந்த பாட்டிக்கு கொடுத்துவிட்டார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. எத்தனையோ பேர் அதை பார்த்து கடந்து சென்றாலும் ஒரு சிறுவன் செய்ததை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஒரு சில பேர், இது உண்மையான வீடியோவே இல்லை இது ஒரு ஸ்கிரிப்ட் என்றும் கூறி வருகின்றனர். இந்த வீடியோவை தான் தற்போது விக்னேஷ் சிவன் தனது  சமூகவலைதளத்தில் "Blessed God bless the boy" என்று ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ பல பேரால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

 

சாலையோர பாட்டிக்காக சிறுவன் செய்த நெகிழ்ச்சி காரியம்! எமோஷனல் ஆன விக்னேஷ் சிவன்! வீடியோ வீடியோ

Boy helps old woman Vignesh Shivan Emotional video hits internet

People looking for online information on Vigneshsivan, Wiki will find this news story useful.