ஆர்யன்கான் ‘போதை’ வழக்கில் திடீர் திருப்பம்! முன்னணி நடிகைக்கும் தொடர்பு? பரபரப்பில் BOLLYWOOD!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சட்ட விரோதமாக போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் NCB அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்ட இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வ்ருகிறது.

ஆர்யன்கானின் வாட்ஸ்அப் உரையாடல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் இன்னும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை சிறைச்சாலையில் உள்ள ஆர்யன் கானை ஷாருக்கான் இன்று (21.10.2021) சந்தித்து பேசியுள்ளார். காலை 9 மணியளவில் இந்த சந்திப்பு நடந்தேறி உள்ளது.

இந்நிலையில் ஆரியன்கானின் வாட்ஸ்அப் உரையாடல்கள் அடிப்படையில் மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (NCB) சில முக்கிய ஆவணங்களை பெற சென்றுள்ளனர். மேலும் இவ்வழக்கில் ஆரியன்கானின் வாட்ஸ்அப் உரையாடல்கள் அடிப்படையில் பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகை அனன்யா பாண்டேவிடம் விசாரணை நடத்த, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேரடியாக அனன்யா பாண்டேவின் வீட்டிற்கு என்று சம்மன் கொடுத்துள்ளனர்.

இன்று மதியம் அனன்யா நேரடியாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராக உள்ளார். அனன்யாவும், ஆர்யன்கானும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இந்த வழக்கில் அனன்யா பாண்டேவின் பெயர் அடிபடுவது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனன்யா பாண்டே தற்போது லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bollywood actor Shah Rukh Khan's son Aryankhan Drug Case

People looking for online information on Ananya Pandey, Aryan Khan, Shah Rukh Khan will find this news story useful.