பிக்பாஸின் 'காந்த' குரலுக்கு சொந்தக்காரர் இவரா?... வெளியான 'புதிய' தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் 4-வது சீசன் தற்போது 80 நாட்களை கடந்துள்ளது. முதல் இரண்டு சீசன்களில் மிகவும் கண்டிப்பாகவும், கறாராகவும் இருந்த பிக்பாஸ் மூன்றாவது மற்றும் நான்காவது சீசனில் ஆளே மாறிவிட்டார். தற்போது எல்லாம் போட்டியாளர்களுடன் சரிக்கு சமமாக பேசி இன்ஸ்டண்ட் கவுண்டர் கொடுத்து வருகிறார். மேலும் போட்டியாளர்கள் வெளியேறும்போது அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி வழியனுப்பி வைக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிக்பாஸின் காந்த குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான் என ஒரு தகவல் வெளியானது. அதன்படி பாலிவுட் நடிகர் சச்சிதானந்தம் என்கிற சாஷோ தான் பிக்பாஸுக்கு குரல் கொடுப்பதாக கூறப்பட்டது. நமது பிஹைண்ட்வுட்ஸ் தரப்பில் இருந்து இதுகுறித்து விசாரித்ததில் அவர் இந்த குரலுக்கு சொந்தக்காரர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதேபோல அமித் பார்கவின் குரல் தான் அது என்றும் சிலர் கருத்து தெரிவிக்க, ஒரேயொரு சீஸன் தான் அதுவும் கன்னட பிக்பாஸ்க்கு என அவரே சொல்லி விட்டார். பிக்பாஸ் யார் என்பது தெரிந்து விட்டால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் அவர் குறித்த தகவல்களை பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள் போல.

பிக்பாஸின் 'காந்த' குரலுக்கு சொந்தக்காரர் இவரா?... வெளியான 'புதிய' தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bollywood actor is giving the voice for Tamil Bigg Boss ?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.