“எங்களுக்கு SELF RESPECT இல்லயா!.. லூசா? ரோட்ல சுத்துறமா?”.. வெடிக்கும் அக்‌ஷரா VS பிரியங்கா சண்டை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 70  நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் ஃபினாலேவை நோக்கிய விறுவிறுப்பான விளையாட்டை விளையாண்டுக் கொண்டிருகின்றனர். 

Advertising
>
Advertising

முன்னதாக இதனை நினைவூட்டி, அறிவுறுத்திய பிக்பாஸ், இனி போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்காக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். அப்போது அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸை நெருப்புடா.. என குறிப்பிட்டு கிண்டல் செய்தனர். 

இதனிடையே பிக்பாஸ் வீட்டில் 5 தடைகளை கடக்கும் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதன்படி வலைக்கு அடியில் பதுங்கி செல்லுதல், சாக்கை காலில் மாட்டிக்கொண்டு தாவித் தாவி நடந்து சென்று முட்டையை உடைத்து அது கீழே சிந்தாமல் குடித்தல் உள்ளிட்டவற்ற செய்ய வேண்டும். 

இதேபோல் போட்டியாளர்கள்  சாணம் கரைக்கப்பட்ட ஒரு தொட்டிக்குள் இறங்கி நாணயங்களை சேகரித்தும் தங்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். சில வேளைகளில் அனைவரையும் பிக்பாஸ் நாமினேட் செய்துவிடுவதும் நடக்கிறது. 

இந்நிலையில் இந்த டாஸ்குகளில் எல்லாம் பிரியங்காவுக்கும் அக்‌ஷராவுக்குமானதாக சண்டைகள் எழுந்து உருவாகி வருகின்றன. முன்னதாக நடந்த டாஸ்குகளில், அக்‌ஷரா மற்றும் சிபி இருவரிடையேயும் வாக்குவாதங்கள் எழுவதை காண முடிந்த்து. குறிப்பாக பால் பண்ணையில் பால் சேகரிக்கும் செண்பகமே செண்பகமே டாஸ்கிலும் சரி, பள்ளி காலங்களை நினைவூட்டும் கனா காணும் காலங்கள் டாஸ்கிலும் சரி, அதன் பிறகு நடந்த பொம்மை டாஸ்கிலும் சரி, இருவர்கள் இருவரிடையே தான் அதிக வாக்கு வாதங்கள் நடந்தன, 

இதேபோல் அனைத்து கேப்டன் டாஸ்குகள் மற்றும் கொடிநாட்டும் டாஸ்குகளில் பிரியங்கா மற்றும் தாமரை இருவரிடையேயான சண்டை அதிகரித்திருந்தது. இதில் பிரியங்கா, எப்போதும் தன்னை மட்டம் தட்டுவதாக தாமரையும், தாமரைக்கு எல்லாம் தெரியும் - ஆனால் எதுவும் தெரியாதது போல் நாடகம் ஆடுகிறாள் - பார்ஷியாலிட்டி பார்க்கிறாளென பிரியங்காவும் கூறிவந்தனர்..

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் அடுத்த கட்டமாக அக்‌ஷரா மற்றும் பிரியங்கா இடையேயான வாக்குவாதங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் எழுந்துள்ளன. அதன்படி டயஸ் உருட்டும் டாஸ்கில் ராஜூ டயஸ் மீது ஏறி அமர்ந்து கொண்டிருப்பதை அக்‌ஷரா ஆங்கிலத்தில் விமர்சிக்க, தமிழில் பேச சொல்லி பிரியங்கா கூறினார். அதற்கு அக்‌ஷரா, ‘போம்மா’ என்றதும், பிரியங்கா, ‘இந்த பேச்செல்லாம் எங்கிட்ட வேணாம்’ என்று கூறியிருந்தார். 

தற்போது இதுபற்றி பேசிய பிரியங்கா, "தமிழ்ல பேசுனு சொன்னது தப்பா? ஒரு வாட்டி 2 வாட்டினா இருந்திருப்பேன். Self Respect-அ இழந்துட்டு உக்காந்துட்டு இருக்கனுமா?" என்று கூறினார்.

இதற்கு அக்‌ஷரா, “அவங்களுக்கு மட்டும்தான் Self Respect இருக்கா? எல்லாமே லூசு மாதிரி ரோட்ல சுத்திட்டு இருக்கோமா?” என்று கேட்கிறார். பிரியங்காவும் அக்‌ஷராவும் சண்டை போடுவது என்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கே புதிதாக தான் இருக்கும்!

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosstamil5 akshara and priyanka fight finale race

People looking for online information on Biggboss 5 tamil, Priyanka akshara fight, Priyanka vs ashara, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.