"5வது வார ELIMINATION!".. பெரும் பரபரப்புக்கு பின் அறிவிக்கப்பட்ட போட்டியாளர் .. கண்ணீரில் ஹவுஸ்மேட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியின் 5வது வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வார எலிமினேஷன் அறிவித்துள்ளார்கள்.

Advertising
>
Advertising

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், முன்னதாக, போட்டியாளர்கள் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி தங்களால் முடிந்த பாடல், நாடகம், கவிதை என அவருக்கு சமர்ப்பித்து வாழ்த்தினர்.

தொடர்ந்து கடைசியாக நடந்த பால் பண்ணையில் பால் சேகரிக்கக் கூடிய செண்பகமே செண்பகமே டாஸ்க் குறித்து கமல்ஹாசன் அனைவரிடமும் கேட்டறிந்தார். இதேபோல் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாமினேஷன் செய்ய விரும்பக்கூடிய போட்டியாளர்கள் பற்றிய விவரத்தையும் அதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார்.

அதன்பிறகு நிரூப், இசைவாணி , அபினய், சுருதி உள்ளிட்டோர் இறுதி நாமினேஷன் பட்டியலில் இணைந்தனர். இவர்களுள் நிரூப், இசைவாணி மற்றும் அபினய் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டு, சுருதி எலிமினேட் செய்யப்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

அதன் பிறகு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, சுருதி தன்னுடைய காயினை மதுமிதாவுக்கு கொடுத்துவிட்டார். ஆனால் பிக்பாஸ் குரல் தோன்றி, காயினை எடுத்துக்கொண்டு, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வர கட்டளையிட்டார்.

இதனையடுத்து காயினை பெற்றுக் கொண்டு வெளியே வந்த சுருதி, தான் வெளியே வருவதற்கு முன்பாக ராஜூவை பற்றிய தன் கருத்தை ராஜூவின் முகத்துக்கு நேரே பார்த்து, “இதை மனதிலேயே வைத்துக் கொண்டு, நான் வெளியேற விரும்பவில்லை, நீங்கள் செய்த தவறு உங்களுக்கு தெரியும்” என்று சுட்டிக் காட்டி விட்டு புறப்பட்டு வந்தார். 

போட்டியாளர்கள் அனைவரும் அவரை கட்டித்தழுவி கதறி அழுதனர். மேலும் காயினை வைத்து க்ளைம் செய்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கும் ஆலோசனை சொல்லி அனுப்பினர்.

சுருதி வெளியேறிய பின்னர், “நீங்கள் எந்த காரணமாக வெளியேறிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்று கமல் கேட்டார்.  அதற்கு பதில் அளித்த சுருதி, “நாம் ஒன்று செய்வோம். பார்ப்பவர்களுக்கு அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கும். அப்படியான காரணமாக கூட இருக்கலாம் .இருப்பினும் எனக்கு தெரியவில்லை” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து இருந்தபடி சுருதி. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் அவர்களைப் பார்த்து குறிப்புகளை கொடுத்தார்.

குறிப்பாக சுருதி, பாவனியை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் அவர் வெளியே வந்துவிட்டால் தானும் அவரும் ஒரே ஃபிளாட் மேட்டாக இருக்க போவதாகவும் குறிப்பிட்டார். இதேபோல் மதுமிதா வெளியே வந்தாலும், ஜெர்மன் போகும்வரை, தன் வீட்டில் தான் தங்கி இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சுருதி பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே வந்ததும் தன்னுடைய உருக்கமான கதையை கூறியது தொடங்கி, காயின் டாஸ்கில் தாமரையுடன் உண்டான கசப்பு வரை சகலமும் நினைவுக் குறும்படமாக வெளியாகியது. இதனை தொடர்ந்து சுருதியிடம் இருக்கும் நாணயத்துக்கு மதிப்பில்லை என்றும் அதை நீங்களே உங்களுடன் ஒரு நினைவாக எடுத்துச் செல்லுங்கள் என்றும் கமல் கூறியதை அடுத்து, சுருதி, பிக்பாஸ் வீட்டைவிட்டு பிரியாவிடைபெற்றார்.

Biggbosstamil5 5th week elimination kamal announced

People looking for online information on Biggboss, Biggboss elimination, BiggBossTamil5, Biggbosstamil5 elimination, KAMALHAASAN, Kamalhassan, Shruthi, Shruti, Suruthi, VijayTelevision will find this news story useful.