அட்ரா.. அட்ரா.. வீட்டை ரெண்டாக்கிய தாமரையின் சுட்டி மகன்! பிரியங்காவுக்கு அடி.. BIGGBOSS கோரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வந்து சந்தித்து விட்டுச் செல்கின்றனர். அப்படி வருபவர்கள் தாங்கள் பார்க்க வரும் போட்டியாளர்கள் பற்றி, வெளியில் இருப்பவர்களின் பார்வைகளைப் பகிர்ந்து விட்டுச் செல்கின்றனர்.

Advertising
>
Advertising

அந்தவகையில் முன்னதாக சிபியின் மனைவி வருகை தந்தார். ராஜூவின் மனைவியும் அம்மாவும் வருகை தந்தனர். இதேபோல் நிரூப்பின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தார். நிரூப்பின் முன்னாள் காதலியும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தார். எனினும் அவர் கண்ணாடி பெட்டகத்தில் இருந்து கொண்டு போட்டியாளர்களை சந்தித்து பேசினார். அக்‌ஷராவின் பெற்றோர், வருணின் பெற்றோர், தாமரையின் மகன், பிரியங்காவின் அம்மா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் வருகை தந்தனர்.

அந்த வகையில் தாமரையின் கணவர் மற்றும் அவரின் இரண்டாவது மகன் மேகவர்ஷன் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். மகனை பார்த்ததும் ஓடி வந்து ஆசையாக கட்டி பிடித்து, தூக்கி கொஞ்சினார் தாமரை. ஹவுஸ் மேட்ஸூம் தாமரையின் மகனுடன் கொஞ்சி குலாவி, விளையாடத் தொடங்கினர்.

ஆனால் தாமரையின் மகன் மிகவும் சேட்டை நிறைந்த சுட்டிப் பையனாக இருக்கிறார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது. ஆம், அந்த சுட்டிபையன் அதையும் இதையும் எடுப்பது, உடைப்பது என்று களத்தில் இறங்க, அனைவரும் அதை தடுக்க முயற்சி செய்தனர். இதனிடையே பிரியங்கா, போடுறா.. அடிடா ..அடிடா.. எங்களால் செய்ய முடியாததை நீ செய்டா.. என்று கூறினார். ஆனால் பிரியங்காவுக்கு ஒரு அடி விழுந்தது. ஆம், பிரியங்காவை தாமரை மகன் அடித்துவிட்டார்.

அதன் பின்னர் பிரியங்காவை அடிக்க கூடாது என்று தாமரை சொன்னார். யாருக்கும் கட்டுப்படாத அந்த பையன், பின்னர் வந்த பிக்பாஸ் குரலுக்கு கட்டுப்பட்டார். பிக்பாஸ் தாமரை மகனிடம், “இந்த வீட்டில் யாரையும் அடிக்காமல், எதையும் உடைக்காமல் பார்த்துவிட்டு செல்ல முடியுமா?” என்று கேட்டதற்கு, அந்த பையன் சரி என்று ஒப்புக் கொண்டார். அதன்பின்னர் சகஜமாக அனைத்து போட்டியாளர்களுடனும் வர்ஷன் விளையாடத் தொடங்கினார்.

அப்போது தனக்கு சிபி மாமா தான் அதிகமாக பிடிக்கும் என்று கூறியதுடன், “என் அம்மா கூட யாராவது சண்டை போட்டால் நீங்க எதுக்கு ஊடால வர்றீங்க? அப்படி வராதீங்க” என பிரியங்காவிடம் மேகவர்ஷன் கூறினார்.  பிரியங்காவோ, “நாங்க இப்போ சண்டை போடலப்பா. சர், இனிமே ஊடால வரல!” என்று மேகவர்ஷனை தேற்றினார்.

இதனிடையே தாமரையின் கணவர், தாமரைக்கு வெளியில் முதல் வெளிநாடு வரை நல்ல பெயர் உண்டானதாக குறிப்பிட்டு பாராட்டினார். இதேபோல், பாவனி, பிரியங்கா என அனைவருடனும் தாமரை நடந்துகொண்ட விதத்தை பற்றிய விமர்சனங்களை தாமரையின் முகத்துக்கு நேரே தன்மையான முறையில் சொல்லி அறிவுறுத்தினார். மேலும் ராஜூவிடம் இருந்து எப்படி பேச வேண்டும் என கற்றுக்கொள்ளச் சொல்லி டிப்ஸ் கொடுத்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss tamil 5 thamarai selvi son and husband entry vijay tv

People looking for online information on Pavani, Priyanka, Thamarai, Thamarai husband, Thamaraiselvi husband, Thamaraiselvi nadagam, Thamaraiselvi son will find this news story useful.