அனிதா சம்பத் எமோஷனல் ஸ்பீச்.. சம்யுக்தா நிறுத்தியது சரியா.. தவறா.? - யாருக்கு சப்போர்ட்.?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய பிக்பாஸ் போட்டியில் சம்யுக்தா நடந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியில், அனிதா சம்பத் அவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர் பற்றி பேசும் போது, தனது கணவரைப் பற்றி எமோஷனலாக பேசினார். அப்போது அவர் அதிக நேரம் எடுத்து கொண்டு கண் கலங்கி பேசினார். 

அவர் அதிக நேரம் எடுத்து கொண்டு பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், போட்டியாளர்கள் சிலர் சிரிப்பை அடக்கி கொண்டு இருக்க, சம்யுக்தா குறுக்கிட்டு, அதிக நேரம் எடுத்து கொள்கிறாய் என அனிதாவுக்கு நினைவூட்டினார். இதை தொடர்ந்து அனிதாவும் பேச்சை நிறுத்தி கொண்டார். 

இந்நிலையில் அனிதா ரொம்ப நேரமாக பேசியதை விமர்சித்தும், சம்யுக்தா செய்தது சரியே, அவர் மிகவும் பக்குவமாகதான் அனிதாவிடம் எடுத்து சொன்னார் என சம்யுக்தாவுக்கு ஆதரவாக நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க, யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதிக நேரம் எடுத்து கொள்கிறார் என்றால், பிக்பாஸ் அதை நினைவூட்டுவார். சம்யுக்தா சொல்லியது தவறு. இல்லையென்றால் அதை எடிட் செய்து கூட தூக்குவார்கள். இவர் இப்படி நிறுத்த சொல்லலாம் என அனிதாவுக்கு ஆதரவாகவும் கமன்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியின் தகவல் | Biggboss tamil 4 fans reaction on samyuktha stopping anitha sampath speech

People looking for online information on Anitha Sampath, BiggBoss Tamil 4, Samyuktha Shan will find this news story useful.