முதல் முறையாக டிவிட்டரில் பிக்பாஸ் பற்றி பதிவிட்ட சுரேஷ்... அந்த போட்டியாளரை தான் சொல்றாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான போட்டியாளராக கருதப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. வெளிவந்த அவர் பிக்பாஸ் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்முறையாக மறைமுக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது "கையில கரண்டி வெச்சி இருக்கவங்க எல்லாம் அன்னபூரணி ஆக முடியாது. தோசைக்கு மாவு தான் அரைக்கனும், ஆனா அர்ச்... ஆளையே அரைக்குது" என்று பதிவிட்டுள்ளார். ஏன் இந்த மறைமுக பதிவு என்று தெரியவில்லை. இதனைப் பார்த்த பலரும் அவர் அர்ச்சனாவை தான சொல்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர். அவர் வெளியேறும் போது அர்ச்சனா மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் மனஸ்தாபத்தில்  இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss suresh chakravarthy post about this contestant பிக்பாஸ் பற்றி பதிவிட்ட சுரேஷ்

People looking for online information on Biggboss, Suresh will find this news story useful.